I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நலம் தரும் வல்லி

Friday, 15 December 2017

நலம் தரும் வல்லி

கற்பூரவல்லியின்
மருத்துவக் குணங்கள்

கற்பூரவல்லி இலையைப்பறித்து அப்படியே இரண்டு மூன்று இலைகளை தினமும் மென்று தின்றால்  கீழ்  அட்டவணையில் உள்ள பல  வியாதிகள் குணமாகும்.!
தோல் நோய்களுக்கும் மூட்டுவலி,முடக்குவாதத்திற்கும் இதையே அரைத்து பற்றாக போட்டுவிட்டு வெயிலில் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால் குணமாகும்.!
வைரஸ்,பாக்டீரியா நோய்கள்,சிறுநீரகக்கல்,மாதவிலக்கு வலி, உடல்வீக்கம்,இரைப்பைவலி,வயிற்றுவலி போன்றவை இருப்பவர்கள் உணவிற்குபின் தினமும் மதியம் கற்பூரவல்லி சாறெடுத்து 50 மிலி வீதம்  தொடர்ந்து குடித்துவர அந்நோய்கள் குணமாகும்.!
மூக்கடைப்பு போக சுடுநீரில் போட்டு ஆவிப்பிடித்துவரலாம்.! பொடுகுத்தொல்லையைப் போக்க  தலையில் அரைத்துப்பூசி குளிக்க வேண்டும்.!
இதுபோக சில நோய்களுக்கு ஐந்து இலைகளை பிய்த்துப்போட்டு 300 மில்லி நீரில் கொதிக்க வைத்து 200 மிலியாக சுருக்கி வடிகட்டி தேன் கலந்து குடித்துவர  தொண்டைப்புண்,வாய்ப்புண்,கபம்,சளி போன்றவை குணமாவதோடு உடல் சோர்வும் நீங்கும்.!

1.தூக்கமின்மை
2.சளி,இருமல்
3.வைரஸ்,பாக்டீரியா
எதிர்ப்பு <பைட்டோ கெமிக்கல் என்ற பொருள் உள்ளது>
4.புற்றுசெல் அழிப்பு
5.பொடுகுத்தொல்லை
6.படர்தாமரை
7.ஒவ்வாமை
8தோல் அரிப்பு
9.உடல் ஊறல்
10.மூட்டுவலி
11.முடக்குவாதம் <வாதம் குணமாக்கும் ஈத்தனோலியிக் இதில் உள்ளது>
12.மூச்சுக்குழாய் அழற்சி
13.தொண்டைப்புண்
14.ஆஸ்துமா
15.மூக்கடைப்பு
16.செரிமானத் தொல்லை
17.வாய்வுத்தொல்லை
18.இரைப்பை மற்றும்
குடல்வலி
19.வயிற்றுப்போக்கு
20.சிறுநீரக கல்
21.உடல்வீக்கம்
22.மாதவிலக்கு வலி
23.தாய்ப்பால் குறைவு
24.கொசு ஒழிப்பு

இதில்  கற்பூரவல்லியால் குணப்படுத்தப்படும் மிக குறைந்த  வியாதிகளையே பட்டியலிட்டுள்ளோம்.!
இவை அனைத்தும் நவீன மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்தறிந்த  உண்மை.!
பழைய நூல்களில் குழந்தைகளுக்கு வரும் எத்தகைய நோயையும் குணப்படுத்தும் என்று பல குறிப்புகள் காணப்படுகிறது.!
எந்த விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும்  எளிய உணவுடன் தினமும்
இரண்டு கற்பூரவல்லி இலையை மென்று தின்றுவர 90 நாளில் பூரண குணம் பெறுவார்கள்.!

☘100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு💥
AUM HERBALS

Mobile & Whats App
9629368389

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...