Tamil Ayurveda - Natural Medicine - Tips for natural Medicine- how to make a Natural Medicine in tamil- Herbal Medicine making tips - 2019 Latest Natural Medicine tips and tricks.
Wednesday, 15 August 2018
அரசியல் வரலாறு
Tuesday, 7 August 2018
தமிழ் இதயத்திற்கு அஞ்சலி
தமிழ்த்தாயின் இளையமகன் கலைஞரின் மறைவையொட்டி
நமது யோகா & இயற்கை வாழ்வியல் வகுப்புகள் அனைத்தும் மூன்று தினங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது
-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
AM YOGA TRUST
சுவீஷ் பேக்கரி பில்டிங்,
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்-4
www.aumherbals.com
Sunday, 5 August 2018
பாரம்பரியம் மீட்போம்
எதிர்க்கும்உண்மை
வலுக்கும்
நோயில் பல தரங்கள் உண்டு 90% நோய்களுக்கு அலோபதி மருந்து தேவையில்லை.
10 % நோய்க்கே அலோபதி மருத்துவம் தேவை.
சென்ற ஆண்டு உலக மருத்துவக்கழகமே இந்தியாவில் எளிய நிலையில் உள்ள நோய்களுக்கு கூட 60 % இரசாயண மருந்துகளை அதிகம் வழங்குவதாக கூறி இருந்தது.
உண்மையில் பிரசவம்
என்பது நோய் அல்ல அது
ஓர் இயற்கை நிகழ்வு.
அதற்கு தேவையான வாழ்க்கை
முறை பயிற்சியையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதே அரசின் முக்கிய கடமை. ஆனால்.
அதை வியாபாரம் ஆக்கியதில் அரசின் பங்கு முக்கியமானது.
இன்று தங்கள் வருமானம் பாதிப்பதால் அலோபதி மருத்துவ வர்த்தகர்களும் அரசும் சேர்ந்து ஹீலர் பாஸ்கர் போன்றோரை அழிக்க முயல்கிறார்கள்.!
எதிர்க்கும் உண்மை வலுக்கும்.! நிறைவில் இயற்கையே வெல்லும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
Thursday, 2 August 2018
ஆரோக்கியம் தரும் மருந்து
பலம் தரும்
பற்ப சூரணம்
நாட்டு அமுக்குரா, சீமை அமுக்குரா,பால்மோதிக்கிழங்கு,நிலப்பனங்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு,சீந்தில் கொடி,பூனைக்காலி விதை,நெருஞ்சி முள்,தோல்நீக்கிய நெல்லிவத்தல்,அதிமதுரம்,
ஏலரிசி,சாதிக்காய்,கிராம்பு வகைக்கு 60 கிராம் சேகரித்து சுத்தம் செய்து பொடித்து லேசாக மண்சட்டியில் வறுத்து சல்லைடையில் மூன்றுமுறை சலித்து
இவற்றுடன் அயச்செந்தூரம்,சிருங்கி பற்பம்,ஆமையோட்டு பற்பம்,கற்பூர சிலாசத்து பற்பம்,சோழிபற்பம்,
சங்குபற்பம் வகைக்கு 30 கிராம் சேர்த்து
கூடவே அரைத்தெடுத்த 900 கிராம் நயம் பனங்கற்கண்டு, சேர்த்து கலக்கி சல்லடையால் சலித்து எடுத்து, கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு; ஒருத்தேக்கரண்டி பொடியை அதே அளவு பசுநெய்யோடு கலந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டுவர இரத்தக்குறைவு,
உடல் சூடு,சோர்வு,உடல் நடுக்கம்,ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும்.
இதே அளவு பொடியை மதிய உணவிற்கு பின் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவர சளி,இருமல், எலும்புருக்கி நோய்,காசநோய்,இழுப்பு,நுரையீரல் புண்,உடல் வெடிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
இதே அளவு பொடியை இரவு உணவிற்கு பின் சிறிது சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வுத்தொல்லை,மலச்சிக்கல்,உடல்வீக்கம்,அஜீரண ஏப்பம்,புளித்த ஏப்பம்,தூக்கமின்மை,மூட்டுவலி,குதிகால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.!
தொடர்ந்து 24 முதல் 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே பொடியை பயன்படுத்த வேண்டும்.!
அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்த்து, இரசாயண உணவுகளை முழுவதும் நீக்கிக் கொள்வதோடு உப்பு,புளி,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே சூரணத்தை கால்த்தேக்கரண்டி மேற்கண்ட துணை மருந்துடன் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு அரைத்தேக்கரண்டி பொடியை அதே அளவு நெய்,தேன்,சுடுநீர் போன்றவற்றில்கலந்து கொடுக்கலாம்.!
*🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*
AUM HERBALS
M&W:9629368389
9629131089
www.aumherbals.com
தியானம் செய்வோம்
சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...
-
https://m.facebook.com/story.php?story_fbid=1247305942383864&id=100013134091933&sfnsn=wiwspmo&d=n&vh=i
-
*உயிர் மீட்கும் மருத்துவம்* 56.உங்கள் கேள்வியும் எனது பதில்களும் "வாழ்வைத்தருவது அன்பு அன்பைத்தருவது காதல் காதலைத்தருவது ஆசை ஆசைய...