I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: August 2018

Wednesday, 15 August 2018

அரசியல் வரலாறு

ராஜயோகச்சுருக்கம்

ஆலயத்திற்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது.  உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண்.
-
மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால்  நல்லது, அதை வரவேற்கலாம். மனம் பக்குவமடைந்துவிட்டல் புறச்சடங்குகள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் .
-
பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
-
யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை.
-
நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.
-
முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி.
-
ரிஷிநிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும்.
-
அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும்.
-
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது.
-
ஒன்றுக்கு ஒன்று முரணானவை போன்றும் சண்டையிடுபவை போன்றும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான்.
-
எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். 
-
நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.!

-சுவாமி விவேகானந்தர்

www.aumherbals.com

Tuesday, 7 August 2018

தமிழ் இதயத்திற்கு அஞ்சலி

தமிழ்த்தாயின்  இளையமகன்  கலைஞரின் மறைவையொட்டி
நமது யோகா & இயற்கை வாழ்வியல் வகுப்புகள் அனைத்தும் மூன்று தினங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
AM YOGA TRUST
சுவீஷ் பேக்கரி பில்டிங்,
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்-4
www.aumherbals.com

Sunday, 5 August 2018

பாரம்பரியம் மீட்போம்

எதிர்க்கும்உண்மை
வலுக்கும்

நோயில் பல தரங்கள் உண்டு 90% நோய்களுக்கு அலோபதி மருந்து தேவையில்லை.
10 % நோய்க்கே அலோபதி மருத்துவம் தேவை.

சென்ற ஆண்டு உலக மருத்துவக்கழகமே இந்தியாவில் எளிய நிலையில் உள்ள  நோய்களுக்கு கூட 60 %  இரசாயண மருந்துகளை அதிகம் வழங்குவதாக கூறி இருந்தது.

உண்மையில் பிரசவம்
என்பது நோய் அல்ல அது
ஓர்  இயற்கை நிகழ்வு.
அதற்கு தேவையான வாழ்க்கை
முறை பயிற்சியையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதே அரசின் முக்கிய கடமை. ஆனால்.
அதை வியாபாரம் ஆக்கியதில் அரசின் பங்கு முக்கியமானது.
இன்று தங்கள் வருமானம் பாதிப்பதால் அலோபதி மருத்துவ வர்த்தகர்களும் அரசும் சேர்ந்து ஹீலர் பாஸ்கர் போன்றோரை அழிக்க முயல்கிறார்கள்.!

எதிர்க்கும் உண்மை வலுக்கும்.! நிறைவில் இயற்கையே வெல்லும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Thursday, 2 August 2018

பழம் தரும் பலம்

ஆரோக்கியம் தரும் மருந்து

பலம் தரும்
பற்ப சூரணம்

நாட்டு அமுக்குரா, சீமை அமுக்குரா,பால்மோதிக்கிழங்கு,நிலப்பனங்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு,சீந்தில் கொடி,பூனைக்காலி விதை,நெருஞ்சி முள்,தோல்நீக்கிய நெல்லிவத்தல்,அதிமதுரம்,
ஏலரிசி,சாதிக்காய்,கிராம்பு வகைக்கு 60 கிராம் சேகரித்து சுத்தம் செய்து பொடித்து லேசாக மண்சட்டியில் வறுத்து சல்லைடையில் மூன்றுமுறை  சலித்து

இவற்றுடன் அயச்செந்தூரம்,சிருங்கி பற்பம்,ஆமையோட்டு பற்பம்,கற்பூர சிலாசத்து பற்பம்,சோழிபற்பம்,
சங்குபற்பம் வகைக்கு 30 கிராம் சேர்த்து

கூடவே  அரைத்தெடுத்த 900 கிராம் நயம் பனங்கற்கண்டு, சேர்த்து கலக்கி சல்லடையால் சலித்து எடுத்து, கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு; ஒருத்தேக்கரண்டி பொடியை அதே அளவு பசுநெய்யோடு கலந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டுவர இரத்தக்குறைவு,
உடல் சூடு,சோர்வு,உடல் நடுக்கம்,ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும்.

இதே அளவு பொடியை மதிய உணவிற்கு பின் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவர சளி,இருமல், எலும்புருக்கி நோய்,காசநோய்,இழுப்பு,நுரையீரல் புண்,உடல் வெடிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.

இதே அளவு பொடியை இரவு உணவிற்கு பின் சிறிது சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாய்வுத்தொல்லை,மலச்சிக்கல்,உடல்வீக்கம்,அஜீரண ஏப்பம்,புளித்த ஏப்பம்,தூக்கமின்மை,மூட்டுவலி,குதிகால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.!

தொடர்ந்து 24 முதல் 48 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே பொடியை பயன்படுத்த வேண்டும்.!

அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்த்து, இரசாயண உணவுகளை முழுவதும் நீக்கிக் கொள்வதோடு உப்பு,புளி,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே சூரணத்தை கால்த்தேக்கரண்டி மேற்கண்ட துணை மருந்துடன் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு அரைத்தேக்கரண்டி பொடியை அதே அளவு நெய்,தேன்,சுடுநீர் போன்றவற்றில்கலந்து கொடுக்கலாம்.!

*🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*

AUM HERBALS
M&W:9629368389
9629131089

www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...