I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: February 2020

Wednesday, 19 February 2020

முள்ளங்கி மருத்துவம்

முள்ளங்கிக்_கிழங்கு_சிறுநீர்
பெருக்கும்_குளிர்ச்சியுண்டாக்கும்

பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக்
கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு,சீதபேதி ஆகியன குணமாகும்

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க சிறுநீரக கல் கரையும்.இதை சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால்
தாது விருத்தி உண்டாகும்.

ஆதிமருத்துவம்

*இயற்கை_வாழ்வியல்_முகாம்*

*இயற்கை வாழ்வியல் கோட்பாடு
*உடலியல் செயல்பாடு
*பஞ்ச சுத்தி முறை விளக்கம்
*யோகாசனம்,சுத்திகரிப்பு கிரியை
*பிராணாயாமம்,தியானம்
*மண்குளியல்
*வாழையிலை குளியல்
*எண்ணெய் குளியல்
*பிராணசிகிட்சை செய்முறை
*கபசுத்தி
*எனிமா சுத்தி
*முக்கிய வர்மப்புள்ளிகளை
தூண்டும் முறையும் பயன்களும்
*இயற்கை உணவு தயாரித்தல்
*நோய்களை குணமாக்கும்
மூலிகை மருந்து தயாரிக்கும் முறை

அடங்கிய முழுமையான இயற்கை
வாழ்வியல் பயிற்சி வகுப்பு

நாள்: மே 8,9,10.
வெள்ளி,சனி,ஞாயிறு

இடம்: அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி.
குமரிமாவட்டம்

நன்கொடை:  ₹ 2850
(பயிற்சி புத்தகம்,தங்குமிடம்
உபகரணங்கள் உட்பட)

முன்பதிவு அவசியம்
தொடர்பிற்கு 9629131089
wwwaumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...