I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: February 2021

Saturday, 27 February 2021

பூண்டு தேன்

#நீண்டநாள்
#ஆரோக்கியம்தரும்
#இரகசியஉணவு

*இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!

-இணையப்பகிர்வு

Friday, 26 February 2021

சூப் குடிங்க பாஸ்

பெரும்பாலான வயதுக்காரர்கள் சாப்பிட வேண்டிய சூப் வகைகள் பற்றிய தகவல்கள்

கொழுப்பைக்கரைக்கும் கொள்ளு_சூப்

தேவையானவை:

கொள்ளு – 4 டீஸ்பூன், மிளகுத் தூள், சீரகத் தூள் .தலா அரை டீஸ்பூன்,
பூண்டு பல் – 5,
தக்காளி – 2, பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :வெறும் கடாயில் கொள்ளைப் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு, அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதில், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள்,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

பயன்கள் :கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் தேவையற்ற நீர், நச்சுக்களை எடுத்துவிடும். புரதம் நிறைந்து இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும்.

நினைவுத்திறனுக்கு வல்லாரை_சூப்

தேவையானவை:

வெங்காயம் – 2 (பெரியது),
மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்,
பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள் :நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை_சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு,
சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3,
தேங்காய்ப் பால் - அரை கப்,
உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள் :உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.

என்றும் ஆரோக்கியமான தகவல்கள் நமது முன்னோர்கள் வழி தகவல்கள் என்றும் ....

Wednesday, 24 February 2021

தடுப்பூசி தேவையா?

தடுப்பூசிக் குறித்து நேரடி விவாதத்துக்குத் தயார் – மருத்துவர். புகழேந்தி அறிவிப்பு.

தடுப்பூசிகள் குறித்துத் தமிழகமெங்கும் வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றது. மக்கள் முன்னிலையிலோ, மருத்துவர்கள் முன்னிலையிலோ இதுக்குறித்துத் தான் நேரடி விவாதத்துக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்குமாறு இன்று தொலைப்பேசி உரையாடலின்போது மருத்துவர். புகழேந்தி தெரிவித்தார். தேதி இடம் குறித்து மருத்துவர். புகழேந்தியிடம் கலந்து முடிவு செய்யலாம். யார் இந்தப் புகழேந்தி என்று ஒரு மருத்துவர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். புகழேந்தியை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறுகுறிப்பு.

கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர். புகழேந்தி எம்பிபிஎஸ் படிக்கும்போது தங்கப்பதக்கம் பெற்றவர். சமூகநல அக்கறையோடு கல்பாக்க அணுக்கதிர் வீச்சுக் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருபவர். சிற்றூர் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கில் வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்தவர். மனசாட்சிக்கு விரோதமாகக் கோடிகளைச் சுருட்டும் மருத்துவர்கள் நடுவில் இவர் ஒரு ‘மக்கள் மருத்துவர்’. இன்றளவும் மருந்துகளையும் உள்ளடக்கி மக்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குபவர். சுருக்கமாகச் சொன்னால் ஐஏஎஸ் அதிகாரிகளுள் எப்படி ஒரு ‘சகாயமோ’, அப்படி மருத்துவர்களில் ‘புகழேந்தி’. இவரைப் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பாசு கூறிய கருத்து: “மருத்துவர் புகழேந்தி ஒரு முட்டாள். ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் இதுபோன்ற முட்டாள்கள் நமக்கு வேண்டும்”.

சிலர் தடுப்பூசிக்கு எதிரான கேள்விகளை ‘அறிவியலுக்கு முரண்பாடானதாக’ மாற்றியமைக்க முயலுகின்றனர். மக்களுக்கான மருத்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. மருந்து நிறுவனங்களின் செலவில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போகும் மருத்துவர்கள் வேண்டுமானால் இதுகுறித்துக் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் நாம் அனைத்து விதத்திலும் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. அய்யங்கள் அனைத்தையும் தெளிவுப்படுத்துங்கள் எனக் கேட்கிறோம். கர்நாடகாவில் பெற்றோர்கள் தடுப்பூசி திட்டத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வர் விருப்பப்பட்டவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார் என செய்திகள் வருகிறது.

சமூகநலம் குறித்து ஓர் அய்யம் ஏற்படும்போது அதுகுறித்துக் கேள்வி கேட்கும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. ஆனால் உடனே நீ ஒரு மருத்துவ அறிஞரா எனக் கேட்கிறார்கள். சமூகநீதியை குறித்துக் கேள்வி எழுப்பிய பெரியாரை ‘அரசியல் அறிவியல்’ படித்தவரா என்றும், கல்விக்கூடங்களைத் திறந்த காமராசரை ‘கல்வியியல்’ படித்தவரா என்றும் கேள்விக் கேட்பது போன்ற அபத்தம் இது. துறை சார்ந்தவர்கள் அமைதிக் காப்பதால் மற்றவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் ஒரு மருத்துவரே விவாதத்தைச் சந்திக்க முன்வந்திருக்கிறார். வரவேற்போம்!

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...