I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: 2019

Friday, 29 November 2019

நீரழிவு குணமாக தோசை

நீரிழிவு குணமாக வரகு தோசை

வரகு – 200 கி.

வெந்தயம் – 25 கி.

உளுந்து – 50 கி.

வாழைப்பூ – 200 கி. (சுத்தம் செய்து நறுக்கியது)

குடமிளகாய் – 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

புதினா, இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி இந்துப்பு – தேவையான அளவு

     வரகு, உளுந்து, வெந்தயம் இவைகளை முளைக்க வைத்து நீர்விட்டு ஓரளவு கெட்டியாக அரைக்கவும். வாழைப்பூவில் உள்ள நரம்புகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி குடமிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு போன்றவற்றை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்த மாவில் சேர்த்து நன்கு பிசையவும். தோசைக் கல்லில் சிறிது மாவை தோசை வடிவில் பரப்பி இரு புறமும் வேகவிட்டு எடுத்து சாப்பிடவும். இதனை அடிக்கடி சாப்பிட நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கல் கரையும்.

குரல் கம்மல் குணமாகும்

அதிமதுரம் 250 கிராம் ஆடாதோடை
இலை 250 கிராம் இது இரண்டையும்
சேர்த்து  பொடித்து வைத்துக்கொண்டு

காலை,இரவு உணவிற்கு பின்
ஒருத்தேக்கரண்டி பொடியை
தேனில் குழைத்து தின்றுவர  நெஞ்சிச்சளி,இழுப்பு,வாய்ப்புண்,
வயிற்றுப்புண்,தொண்டைக்கட்டு,
மூக்கடைப்பு,குரல்கம்மல்
குணமாகும்.!இவ்வாறு 12
முதல் 48 நாட்கள்
செய்ய வேண்டும்.

ஒரு வெற்றிலை,பத்து நல்லமிளகு
இவற்றை மென்று சாப்பிட்டு அரைடம்ளர்
சுடுநீர் அருந்த மூன்று வேளை மருந்தில்
தேள்கடி,பூரான்கடி விசம் அகலும்
கடிவாயில் சிறிது மஞ்சள் தூளில்
கொஞ்சுண்டு சுண்ணாம்பு
நீரில் குழைத்து பூச வேண்டும்.!

பத்து துளசி இலை ஐந்து குறுமிளகு
இவற்றை மென்று உணவிற்கு பின்
சாப்பிட தலைவலி, உடல் அயர்ச்சி
நொடியில் மறையும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Tuesday, 12 November 2019

யூரியா குறைய வைத்தியம்

வெங்காயம்

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

கருப்பை கட்டி கரைய

கருப்பைக் கட்டி கரைய

தான்றிக்காய் தோல் – 100 கிராம்

கடுக்காய் தோல் – 100 கிராம்

சுக்கு – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

திப்பிலி – 100 கிராம்

குமட்டி உப்பு – 100 கிராம்

          (1 லிட்டர் குமட்டிச்சாறு, அரைபடி கறிஉப்பு இரண்டையும் அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். சாறு சுண்டி கடைசியில் உப்பாக மாறும். இதை நன்கு தூள் செய்து காற்று புகாதபடி அடைத்து வைக்கவும்.)
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, குமட்டி உப்பைக் கலந்து வைத்து கொள்ளவும்.

இதில் ஐந்து கிராம் அளவில் அதிகாலையில் பெண்கள் சாப்பிட்டுவர கருக்குழி சுத்தியாகி, குழந்தைப்பேறு உண்டாகும். கருப்பையில் உண்டாகும் கட்டிகள் முழுவதும் கரையும். எமது அனுபவ மருந்து.

கருப்பை கோளாறு நீங்க

அத்திக்காய் கூட்டு

தேவையானவை:

அத்திக்காய் - 15,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்),
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
தேங்காய் எண்ணெய்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.

*செய்முறை*

அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு  துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும்.

குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும். இதை பெண்கள் அடிக்கடி சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கும்.

அதிமூத்திரம் குணமாக

அடிக்கடி சிறுநீர்கழித்தல் தீர

அடிக்கடி சிறுநீர் கழித்தலால் உடலுக்கு ஒரு களைப்புநிலை ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தின் வேலைத்திறனும் அதிகரிக்கிறது. இக்குறை நீக்க மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது.

1) வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

2)              ஆவாரம்பூ                   -  30 கிராம்
                கடுக்காய்                    -  30 கிராம்
                தென்னம்பூ                  -  30 கிராம்
                மாதுளம்பூ                  -  30 கிராம்
                கடுக்காய்பூ                  -  30 கிராம்
                மஞ்சள்                     -  30 கிராம்

                இவையனைத்தையும் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கு 2 கிராம் வீதம் சாப்பிட அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீங்கும்.

                கருப்பு எள்            -  5 கிராம் (1 ஸ்பூன்)
                மஞ்சள்               -  2 கிராம்
                பருத்திவிதை         -  5 கிராம்    மூன்றையும் வெந்நீர் விட்டரைத்து, சாப்பிட அடிக்கடி சிறுநீர் போதல் குணமாகும்.

4) நல்லெண்ணெய் 10 மி.லி அளவு எடுத்துக்கொண்டு அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, உள்ளுக்கு சாப்பிட, அடிக்கடி சிறுநீர் இறங்குதல் குணமாகும்.

5) படிகார பற்பத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, தயிரில் சாப்பிட, அடிக்கடி சிறுநீர் போதல் நிற்கும்.

காரணமும் தீர்வும்

நெஞ்சு_சளி
எதனால்_ஏற்படுகிறது

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரியாகி விடும்.
நாள்பட்ட நெஞ்சு சளியின் அறிகுறிகள்
உடனே தெரிவதில்லை.

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம்,காசநோய்,ஆஸ்துமா
போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நாம் உண்ட உணவை ஜீரணம் செய்யும் போதும்,உணவு  ஜீரணத்தின் பின் ஏற்படும்  கழிவுமே சளியாக மாறுகிறது.சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒன்றாக சாப்பிடாமல் இருப்பதோடு அன்றாட உணவில் பாதி சமைக்காத பழம்,காய்கறி,அவல் போன்றவற்றை மட்டும் ஒரிரு வேளை உணவாக எடுத்துக்கொண்டால் சளி உற்பத்தி வெகுவாக குறைந்து நாள்பட்ட சளியும் கரைந்து வெளியேற ஆரம்பித்துவிடும்.

தட்ப வெப்ப மாறுபாடு,நீர் மாறுபாடு,உடல் வெப்ப அளவு மாறுபடுதல்,புகை,தூசு,மாசு நிறைந்த பணிச்சூழல்,புகைப்பிடிப்பது,
புகைபுடிப்பவர்களோடு உடனிருத்தல்,
ஒவ்வாத கிருமிகள்  உடலில் தங்குதல் போன்ற காரணங்களாலும் சளி ஏற்படும்.
தேவையான போது உண்ணா நோன்பு இருப்பது.ஜங்க் உணவுகளை தவிர்த்து தேவையான சத்தான உணவை எடுப்பது.பூண்டு,மிளகு,மஞ்சள்
போன்றவற்றைஎடுத்துக்கொள்வது,தினமும் காலையில் குளிப்பது,முறையான உடற்பயிற்சி செய்வது இவற்றின் மூலம் இந்த வகை சளியை வேகமாக வெளியேற்ற முடியும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.  நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

உடனடி நிவாரணமாக தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் படிப்படியாக குணப்படுத்தி விடலாம்.

நாள் பட்ட நெஞ்சு சளியை உடனே நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்தால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை  பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.

எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பனங்கற்கண்டு பசும்பாலுடன்  கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் காலை உணவிற்கு அரைமணி முன்பு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

2 துளசி, 2 கற்பூரவல்லி இலைகளோடு 3 குறுமிளகு சேர்த்து சதைத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை உணவிற்கு அரைமணி முன்பு உண்டுவர சளி,இருமல்,தலைவலி காணாமல் போகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

Tuesday, 22 October 2019

எளிய முறை லேகியம்

தீபாவளி_லேகியம்
செய்வதெப்படி?

1. சுக்கு                - 50 கிராம்
2. சித்தரத்தை  - 50 கிராம்
3. கண்டதிப்பலி  - 25 கிராம்
4. அரிசி திப்பிலி  - 5 கிராம்
5. ஓமம்                 - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை  - 50 கிராம்
7. மிளகு                              - 50 கிராம்
8. கிராம்பு                      - 20 கிராம்
9. ஜாதி பத்திரி             - 10 கிராம்
10. விரளி மஞ்சள்         * 10 கிராம்
11. வெல்லம்                 - 250 கிராம்
12. நெய்                          - 200 கிராம்
13. தேன்                         - 100 கிராம்

செய்முறை

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பிறகு எல்லாவற்றையும் சேர்த்து உரல் அல்லது மிக்ஸியில் பொடிதாக பொடித்து சலித்துக்கொள்ளவும். 

அடுப்பில் சட்டியை வைத்து வெல்லத்தை சிறிது நீர்விட்டு பாகாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும். பொடித்த சரக்குகளை வேறு ஒரு இரும்புச்சட்டியில் போட்டு வெல்லக்கரைசல்,தேன், நெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி அடி பிடிக்காமல் கிளறி வரவும் ஒரு அரைமணி நேரத்தில் அனைத்தும் திரண்டு லேகிய பக்குவத்திற்கு வந்ததும் இறக்கி சூடு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து  உணவிற்கு பின் காலை,மதியம் சாப்பிட்டு சிறிது சுடுநீர் அருந்திவர அஜீரணக்கோளாறு,உப்புசம்,ஏப்பம்
,வாய்வுப்பிடிப்பு நீங்கும்.

குறிப்பு: எவ்வளவு சுவையான பலகாரமாய் இருந்தாலும் முக்கால் வயிற்றுக்கு மேல் உண்பது பாதுகாப்பானது இல்லை. www.aumherbals.com

Saturday, 19 October 2019

மந்திர இரகசியங்கள்

என் வீட்டில் புத்தக அலுமாரியை இன்று சுத்தம் செய்யும் போது மிக பழைய "அகஸ்தியர் மந்திர வாள்" என்னும் நூல் கையில் தட்டியது. இன்று வரை மிக பெரிய மாந்திரிகர்களால் மட்டுமே ரகசியமாக கையாளப்படும் நூல் இந்த "அகத்தியர் மந்திர வாள்" என்னும் நூல். அதில் உள்ள மூல மந்திர ரகசியத்தை பகிர்கிறேன்.

புரிஞ்சி கொள்ள கூடியவங்க...
                  புரிஞ்சி கொள்ளுங்க......

மோகனம்
***********

ஓம் ரீங் மோகி மோகி

வசியம்
********

ஓம் ரீங் வசி வசி

ஸ்தம்பனம்
*************

ஓம் ரீங் ஸ்தம்பய ஸதம்பய

ஆகர்ஷணம்
**************

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய

கட்டிகள் கரைய
*****************

ஓம் ரீங் கசி கசி

மசிய வைத்தல்
*****************

ஓம் ரீங் மசி மசி

நோய் நீக்குதல்
*****************

ஓம் ரீங் நசி நசி

சத்ரு சம்ஹாரம்
*****************

ஓம் ரீங் மசி நசி நசி மசி

சகல செளபாக்கியம் பெற
*****************************                  ஓம் ரீங் சிவ சிவ.
         -சித்தர்களின் குரல்

கற்றாழை ஜூஸ்

https://youtu.be/SPjnCl04Ksk

பக்கவாதம் தீர பயிற்சிகள்

https://youtu.be/L_OZbMhvw60

கற்றாழை ஜூஸ்

https://youtu.be/SPjnCl04Ksk

பக்கவாதம் தீர பயிற்சிகள்

https://youtu.be/L_OZbMhvw60

Wednesday, 16 October 2019

புண்,தோல்நோய் மருந்து

ஆறாத_புண்ணை_ஆற்றும்
அதிசய_எண்ணெய்

500 மில்லி செக்கு தேங்காய் எண்ணெயில் 30 செவ்வரளிப்பூவை பிய்த்துப்போட்டு கலக்கி தினமும் ஐந்து மணி நேரம் விதம் 5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து பிழிந்து எண்ணெயை மட்டும் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு …

சக்கரை வியாதியால் ஆறாத புண்,படர்தாமரை,தேமல்,நாள்ப்பட்ட புண், சேற்றுப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீரில் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி துடைத்து விட்டு இந்த எண்ணெயை கையில் படாமல் மயிலிறகு அல்லது கோழி இறகில் எடுத்துப்போட்டு வர எவ்வளவு கடினமான புண்களும் 12 முதல் 48 நாளில் முழுமையாக ஆறிவிடும்.

குறிப்பு;செவ்வரளிப்பூ கிடைக்காதவர்கள் வெள்ளை அரளியை
10  கூடுதலாக பயன்படுத்தி எண்ணெய்
தயாரிக்கலாம்.இது வியாதி உள்ளவர்கள் மட்டுமே மேல் பூச்சாக
பயன்படுத்த வேண்டிய மருந்து
மற்றவர்கள் கைகளில் தொடுவதை
தவிர்க்கவும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் www.aumherbals.com

Tuesday, 15 October 2019

மூளை இரத்தக்கட்டை கரைக்க

வீட்டு_வைத்தியம்

வெள்ளைப்பூண்டு 2 பல்.
சின்னவெங்காயம் 1.
கொத்தமல்லி விதை
ஒருத்தேக்கரண்டி,
மஞ்சள்தூள்
அரைத்தேக்கரண்டி
செம்பருத்திப்பூ 1.

இவற்றை  தட்டிப்போட்டு 700 மில்லி
நீர்சேர்த்து கொதிக்க வைத்து 350 மில்லி அளவாக சுருங்கியதும் இறக்கி
பிழிந்து வடிகட்டி காலை,மதியம்
உணவிற்கு பின் தொடர்ந்து 48 நாட்கள்
குடித்து வந்தால் உடல் வீக்கம்,மூளை
இரத்தக்கட்டு,இரத்தசுத்தமின்மை,
இரத்த அழுத்தம்,பக்கவாதம்,இதயநோய்
போன்றவை குணமாகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

கேப்சூல் கொடும

https://youtu.be/jdqpsHIt0_s

Wednesday, 9 October 2019

சளி அடைப்பு குணமாக

சைனஸ்_குணமாக
எளிய_வைத்தியம்

சின்ன வெங்காயம்,
இஞ்சி,பூண்டு தலா 25 கிராம்.மஞ்சள் தூள் கால்த்தேக்கரண்டி,கிராம்பு 5 இவற்றை நன்றாக வெட்டி 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அது அரைலிட்டராக சுருங்கியதும் எடுத்து வடிகட்டி காலை உணவிற்கு பின்,மதிய உணவிற்கு பின் இரண்டு வேளை சமஅளவாக பகிர்ந்து 12 முதல் 48 நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சுச்சளி,சைனஸ்,அடுக்குத்தும்மல்,இழுப்பு,தலைநீர்,தலைபாரம்,தலைவலி முழுதாக குணமாகும்.

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Sunday, 6 October 2019

தியானத்தின் திறவுகோல்

மிட்டாய்_தீட்சையும்
மெய்யுணர்வு_தியானமும்

---ஏகப்பிரியன்---

தியானம் என்பது உயிரை உணரச்செய்வதற்கான வழிமுறை மட்டுமல்ல உடலை முழு விழிப்புணர்வோடும் சக்தியோடும் இயங்க செய்வதற்கான கருவி. தற்காலத்தில் தியானம் பற்றிய தெளிவின்மையும் கற்பனையும் மக்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது.

சற்று எழுதும் திறன் கொண்டவர்களும் பேச்சாற்றால் உள்ளவர்களும் ஞானிகள் என்று அறியப்பட்டவர்களும் அதுபற்றிய கற்பனை கதைகள் பெருகுவதற்கு காரணமானவர்கள்.
முதன்முதலில் தியானம் பற்றிய தெளிவான புரிதல்களை வழங்கியவர்கள் பதஞ்சலி,கௌதம புத்தர்,சிவவாக்கியர் போன்றோர்களே.

இவர்கள் துறவிகளாக இருந்ததும் பிற்காலத்தில் தோன்றிய இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமச்சந்திரர்,இரமணர்,
விவேகானந்தர் போன்ற தியானிகளும் அப்படியே தோன்றியதாலும் தியானம் என்பது எதோ மடத்து மந்திரவாதம்,துறவு வாழ்க்கையின் முதல்படி என்றெல்லாம்
பலரும் பயந்திருந்த காலத்தில் அமெரிக்கா சென்று இல்லறவாசிகள்,புலால் உண்பவர்கள்,அரசியல்வாதிகள்,
தொழில் வல்லுனர்கள்,வாலிபர்கள் என்று பலருக்கும் தியானத்தை கற்பித்து
அதை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வழிகாட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

அதே வழியில் அதன்பிறகு  வந்த ஓஷோ,பரஞ்சோதி மகான்,வேதாத்ரி மகரிசி போன்ற ஞானிகளும் தியானம் மீதிருந்த அச்சத்தைப் போக்கி தியானம் என்பது உயிர்களின் அடிப்படைத்தேவை என்பதை உணர்த்தி கண்ணில் படுவோர்க்கெல்லாம் கற்பிக்க ஆரம்பித்தனர்.

இதன் பிறகு ஆசிரியர்கள், விளையாட்டு,கலைகளை கற்பிப்பவர்கள்,திரைப்படக்கலைஞர்கள் என்று பலரும் தங்கள் துறை சார்ந்த விசயங்களில் தியானத்தை ஒரு பகுதியாக இணைத்து விட்டனர்.இப்பொழுது உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் தங்கள் சமயோசிதம் போல தியானத்திற்கும் வாழ்க்கைக்கும் புதுப்புது விளக்கங்களை கூறி மக்களிடம் மீண்டும் குழப்பத்தை விதைக்கிறார்கள்.

தியானம் செய்வதால் நமது நாடித்துடிப்புகள் சீராகி மனம் முழுமையாக அமைதியாகி
விடுவதால் உடல் சக்திவிரயம் தடுக்கப்படுகிறது.இதன் காரணமாக இதுவரை இடைவிடாத எண்ணங்களால் சோர்வுற்று நலிவடைந்திருந்த மனமும் உடலும் புதிய ஆற்றலுடன் செயல்பட்டு தங்கள் தேவைகள் எதுவாய் இருந்தாலும் அதை அடைய தேவையான முழுமையான ஆற்றலை பெறுகிறது.நான் கூறுவது  தியானம் பற்றி மருத்துவ விஞ்ஞானம் கூறும் ஆரம்ப பயன்.

தியானம் பற்றிய பெரிய புரிதல் இல்லாவிட்டாலும் கூட பலரும் சங்கடமான சூழலில்,உத்வேகம் தேவையான நேரத்தில் சிறிது நேரம் கண்மூடி இருப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவே பெரிய சக்தியை வழங்குவதை அவர்கள் உணருவார்கள்.இப்படி ஆரம்பிக்கும் தியானம் அதன்பிறகு பல்வேறு வழிமுறைகளை கடந்து நம்மை மாபெரும் வெற்றியாளனாகவோ, மடத்து அடிமையாகவோ,அல்லது உண்மை ஞானியாகவோ ஆக்கும். இந்த ஞானம் என்பதில் மட்டும் இன்னும் கற்பனைகள் அதிகமாக தோன்றிக்கொண்டே உள்ளது.ஞானியானால் காட்டுக்கு சென்றுவிடுவான்,குடும்பத்தை விட்டுவிடுவார்கள்,குருபக்தியில் திளைத்து அழிந்து விடுவார்கள் என்றெல்லாம் பல கற்பனைகள் இன்றும் நிலவுகிறது. இதற்கு உரமிட்டு வளர்ப்பவர்கள் பலர்.ஆனால் இதில் உண்மை மிக குறைவு.ஞானியானவன் எல்லாம் குடும்பத்தை விட்டு தனியாக போவதில்லை.சிலர் போயிருப்பார்கள்.தன்னை உணர்ந்தும்,ஞானியாய் இருந்தும் தங்கள் தொழில்களிலேயே நீடித்து இல்லறத்தை நடத்துபவர்கள் பலர் உள்ளனர். ஆகையால் தியானம் ஞானத்தின் திறவுகோலாய் இருப்பதாலோ அல்லது பல சித்தர்களும் ஞானிகளும்;எல்லாம் துறந்து காட்டை நோக்கி போனார்கள் என்பதாலோ தியானம் செய்வது ஆபத்தானது,ஒரு குருவிடம் தீட்சை வாங்குவது பெரிய முட்டாள்த்தனம் என்று கூற முடியாது.

ஏனெனில் தியானம் என்பது மனிதனின் பிறப்புரிமை, ஞானம் மனிதனின் பெருமை.தியானத்தின் மூலம் மனிதனுக்குள் ஏற்படும் பலகட்ட மாற்றத்திற்கு பிறகே ஒருவன் ஞானியாகிறான்.தியானியாக இல்லாதவன் கூட மனவெளியில்
தடுக்கி விழுந்து திடீர் ஞானியாக நேரிடலாம்.இதில் அச்சப்படவோ,இனியும் ஆராய்ச்சி செய்யவோ ஒன்றுமே இல்லை.

புத்தன் முதல் வேதாத்ரி மகரிசி வரை  எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் போதுமான அளவு உணர்ந்து,முயன்று,வழிகாட்டி முக்தியடைந்து விட்டார்கள்.தியானமும் ஞானமும் இந்தியாவின் பாரம்பரியச்சொத்து.குறிப்பாக தமிழனின் மரபணுவிலேயே தியானம் பினைந்துள்ளது.அதை நினைவுப்படுத்தி தூண்டிவிட மட்டுமே குரு தேவைப்படுகிறார்.

நான் எனது 15 வயதிலேயே தியான உணர்வைபெற்றுவிட்டேன்.பல தியான குருமார்களிடமும் தீட்சை வாங்கி உள்ளேன்.05/10/2019 அன்று எனது மகன் இஜாஸ் தனது 22 வது வயதில்; மெய்ஞ்ஞானி பரஞ்சோதி.
ஞானப்பிராகாசரிடம் மிட்டாய் தீட்சையும் குண்டலினி மெய்யுணர்வு தியானமும் பெற்றுக்கொண்டான்.அவனோடு நானும் மேலும் பலரும் தியான தீட்சை பெற்றோம்.இந்த பயிற்சியில் எடுத்த வீடியோவை பார்த்த ஒருசில முகநூல் நண்பர்கள் பிழைப்பை பாருங்க நண்பரே தியானத்தில் நீங்கள் தொலைந்தது போல் உங்களை சார்ந்தவர்களையும் தொலைத்து விடாதீர்கள்.என்ற ரீதியில் கைப்பேசியில் அழைத்து கர்ஜித்தனர்.அட அறிவாளிகளே,
விவேகானந்தர்,பாரதி,பரஞ்சோதி
மகான்,வேதாத்ரி மகரிசி என்று எத்தனை யோ ஞானிகள் தங்கள் விழிப்புணர்வால் மெய்யுணர்வை உணர்த்திச்சென்றாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் தியானம் ஆபத்தானது என்று ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.

#எனது புதிய அனுபவம் பரஞ்சோதி மகானின் உலக சமாதான ஆலயத்தின் குண்டலினி தீட்சையாக மூலாதாரத்திலிருந்து ஆறாதாரத்திற்கு  கைகளால் தூண்டி  மிட்டாயைவழங்கினார்கள். கண்மூடி அமர்ந்து அதன் சுவையை நெற்றியில் உணர வேண்டும்.நெற்றியில் குளிர்ந்த நீரை தடவிவிட உணர்வு அந்த இடத்தில் நிலைக்கும்;அடுத்து வெங்கல மணியை அடிக்க நெற்றியில் அதன் ஓசை ஆழமாக ஊடுருவிச்சென்றதையும் மனம் பல கணங்கள் மனமற்று இயங்கியதையும் என்னால் முழுமையாக உணர முடிந்தது.

20 நிமிடம் போனதே தெரியவில்லை.புத்தரின் விழிப்புணர்வு தியானமான விபசனாவிற்கும் பரஞ்சோதி மகானின் மெய்யுணர்வான குண்டலினி தியானத்திற்கும் ஒரு சிறிய நூலிலை வித்தியாசம் தோன்றியது.அதை ஆராய்ந்து அனுபவித்து வருகிறேன்.

இந்த கணத்தில் நானே மெய்யுணர்வாகவும் பரஞ்சோதி மகானாகவும்  இருக்கிறேன்.! சிலர் இன்னும் மகான் கூறிய கருத்தில் உள்ள  ஐயங்களையும் மகானின் வாழ்க்கை முறையில் சில கேள்விகளையும் எழுப்புகிறார்கள். அதன் விடை தெளிந்த நீரோடையின் அடியில் மிளிரும் வடிவ கற்கள்  போல எனக்கு தெளிவாக தெரிகிறது.தேவைப்படின் அதை பின்னர் விளக்குவோம்.!வாழ்க வளமுடன்.!

🍁🍁சந்தோசம்🍁🍁
www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...