கருப்பைக் கட்டி கரைய
தான்றிக்காய் தோல் – 100 கிராம்
கடுக்காய் தோல் – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
திப்பிலி – 100 கிராம்
குமட்டி உப்பு – 100 கிராம்
(1 லிட்டர் குமட்டிச்சாறு, அரைபடி கறிஉப்பு இரண்டையும் அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். சாறு சுண்டி கடைசியில் உப்பாக மாறும். இதை நன்கு தூள் செய்து காற்று புகாதபடி அடைத்து வைக்கவும்.)
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, குமட்டி உப்பைக் கலந்து வைத்து கொள்ளவும்.
இதில் ஐந்து கிராம் அளவில் அதிகாலையில் பெண்கள் சாப்பிட்டுவர கருக்குழி சுத்தியாகி, குழந்தைப்பேறு உண்டாகும். கருப்பையில் உண்டாகும் கட்டிகள் முழுவதும் கரையும். எமது அனுபவ மருந்து.
No comments:
Post a Comment