I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: September 2018

Saturday, 29 September 2018

*யோகத்திற்கு நன்றி*

ஒரு 55 வயது பெரியவருக்கு திடீரென்று உணவுப்பாதை மூடி இறுக்கம் தளர்ந்து உணவு உள் செல்ல முடியாத நிலை.
(முழுங்க முடியாது உள்ளே நாம் முயன்று   உணவையோ
 நீரையோ செலுத்தினால் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து அனைத்தும் வெளியாகி
விடும்.) மருத்துவர்கள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவ மனையில் வைத்துவிட்டு நாசியோடு இரைப்பைக்கு நேரடியாக ஒரு குழாயை வைத்து திரவ உணவை மட்டும்
நன்றாக கரைத்து கொடுக்க வலியுறுத்தியதோடு வேறு ஒன்றும் செய்ய இயலாது. என்று கூறிவிட்டனர்.!

நான் ஒரு பத்துநாள் அவருக்கு, வீட்டில் சென்று தொண்டை பகுதி தளர்வை சரிசெய்யும் சில யோக நுட்பங்களை கற்றுக்கொடுத்து வந்தேன். தொடர்ந்து அவரும் தினமும் பயிற்சிகளை தனது பிள்ளைகளின் துணையுடன் செய்து வந்தார். (சுமார் இரண்டு மாதம்) புதன்கிழமை முதல் அவர் நேரடியாக "உணவை சாப்பிடுவதாகவும்

நாசி வழி குழாயை எடுத்து விட்டதாகவும் "
அவரின் மகள்; என்னை இன்று  கைப்பேசியில் தொடர்புகொண்டு யோகத்திற்கு நன்றி
என்று கூறினார்.!

நானும் அதையே கூறுகிறேன்.!
யோகத்திற்கு மனம் நிறைந்த
நன்றிகள் ஆயிரம்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Tuesday, 18 September 2018

*உயிர் மீட்கும் மருத்துவம்*

--ஏகப்பிரியன்---

53.மூலிகை குடிநீரும்
 மூலிகைச்சாறும்

" தன்னுயிர் தந்து
 மண்ணுயிர் ஏந்தும்
மூலிகை மருந்தே
விளங்குது சிறந்தே.! "

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைத்தேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காய் தோடை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் மூன்று நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு கரைத்து வடிகட்டி குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர் சிகிட்சையை செய்யக்கூடாது.!
ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
ஒருமுறை தயாரித்த நீரை
அதிகபட்சம் ஆறு மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.!
மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயன்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயன்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்த நீரோ தேவையில்லை.!

தினம் ஒரு மூலிகைச்சாறு

திங்கள் - வாழைத்தண்டு

ஒரு சிறிய வாழைத்துண்டை வெட்டி ஒரு டம்ளர் அளவு வாழைத்தண்டுடன் 10 மிளகைப்போட்டு  சிறிய தட்டு உரலில் இடித்து, சாறெடுத்து வடிகட்டி அதோடு, ஒருத்தேக்கரண்டி தேனும் ,சாறளவு நீரும் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்,சிறுநீரகம் பலப்படும்.!

சொவ்வாய் -செம்பருத்தி

நான்கு செம்பருத்திப்பூவை பறித்து 10 சீரகம் சேர்த்து தட்டுக்கல் அல்லது மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொண்டு அந்த கலவையுடன் ஒருத்தேக்கரண்டி தேன் மற்றும் ஒருடம்ளர் நீர் கலந்து குடித்து வந்தால் இதயம் பலப்படும்.இதயநோய்,பெண்கள் மாதந்திர பிரச்சனைகள் குணமாகும்.!

புதன் - புதினா

இரண்டு கையளவு புதினா இலையோடு ஒருத்தேக்கரண்டி கொத்தமல்லி, 10 மிளகு,சிறிது இந்துப்பு போட்டு இடித்து சாறெடுத்து அல்லது அரைத்து அதோடு இரண்டு பங்கு நீர்சேர்த்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம்,மன அழுத்தம் குணமாகும்.!

வியாழன் - தூதுவளை

5 தூதுவளை இலையுடன் 10 மிளகு சேர்த்து நன்றாக இடித்து  300 மில்லி நீர் சேர்த்து வடிகட்டி, இரண்டுத் தேக்கரண்டி பனங்கற்கண்டு தூள் சேர்த்து குடித்துவந்தால் சளி,இருமல்,சுவாசகாசம் நீங்கும்.!

வெள்ளி -வல்லாரை

 கையளவு வல்லாரை கீரையுடன் ஒருத்தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து இடித்து சாறெடுத்து அத்துடன் ஒருத்தேக்கரண்டி பனை வெல்லம் மற்றும் ஒரு டம்ளர் நீர் சேர்த்து குடித்து வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். உடல் இறுக்கம் குறையும்,மூளை வலுவடையும்.!

சனி - கீழாநெல்லி

இருகையளவு கீழாநெல்லி இலையை பறித்து மைய்யாக அரைத்து 300 மில்லி பசுமோர் அல்லது நீர் கலந்து குடித்துவர கல்லீரல் பலமாகும்.கண்பார்வை தெளிவடையும்.!

ஞாயிறு - பலகீரை

சிறிது முடக்கத்தான், சிறிது முருங்கை,சிறிது பசலி,சிறிது அகத்தி அல்லது உங்களுக்கு கிடைக்கும் வேறு ஏதேனும் மூன்று நான்கு கீரைகளை மொத்தமாக அரைத்து, அதனோடு தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உடல் வலி,எலும்பு தேய்மானம்,தலை சுற்றல் குணமாகும்.!

கற்றாளைச்சாறு

சோற்றுக்கற்றாளையை கழுவி தோல் நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் ஒரு டம்ளர் அளவிற்கு சிறிதாக வெட்டி எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சைச் சாறு பிழிந்து ,இரண்டு கிராம்பு தட்டிப்போட்டு, நான்கைந்து  தேக்கரண்டி தேன்கலந்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து <10 நாட்கள்> குடித்துவந்தால் இறந்த செல்கள் வெளியேறும்,உடல் சூடு,தூக்கமின்மை,சிறுநீரக சோர்வு போன்ற வியாதிகள் குணமாகும்.!

எலுமிச்சை சாறு

ஒரு எலுமிச்சை பழச்சாறுடன், ஒருத்தேக்கரண்டு இஞ்சிச்சாறு, இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து 200 மில்லி நீர் கலந்து உணவிற்கு அரை மணிநேரம் முன்பு <10 நாட்கள்> குடித்து வந்தால் பித்த மயக்கம்,இரத்தசோகை ,உடல்சோர்வு போன்றவை மாறும்.!
குறிப்பிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான மூலிகை சாறையே தினமும் குடித்து  வரலாம்.! மூலிகைச்சாற்றை  காலை உணவிற்கு குறைந்தது அரைமணி முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பு குடித்துவிடுவது நல்லது.!
பச்சை மூலிகை கிடைக்காதவர்கள் காய்ந்த மூலிகைகளை இதே முறையில் கசாயமாக வைத்தும் குடிக்கலாம்.!
ஒரு தடவை தயாரித்த சாற்றை
4 மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.!
நலம் பெருகட்டும் …

இது போன்ற ஆரோக்கிய வழிமுறைகள் யோகா,தியானம்,மூலிகை மருத்துவ நுட்பங்கள்,வர்மக்கலை  அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் ஆதிமருத்துவம்

384 பக்கம் 360 ரூ

உங்கள் தேவைக்கு
 அழைக்கவும்
9629368389
9629131089
www.aumherbals.com

Friday, 14 September 2018

யோகம் தரும் சுகம்

யோகா தெரபி

இழுப்பு,நீரழிவு,இரத்த அழுத்தம்,
மனஅழுத்தம்,உடல் பருமன்
போன்ற நோய்களை
 யோகாவின் மூலம் பத்து நாட்களில்
கட்டுப்படுத்துகிறோம்.!

குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு
 வீட்டில் வந்தும் வகுப்பு எடுக்கிறோம்.

Eghaprian
m. Ismail D.Y.T
9629131089
9629368389
AM YOGA TRUST 461/2012
சுவீஸ் பேக்கரி பில்டிங்
பார்வதிபுரம் ஜங்சன்
நாகர்கோவில்-3
www.aumherbals.com

மருந்துகள் தயாரிப்பு முறை

உயிர் மீட்கும் மருத்துவம்

17.A எளிய மூலிகை மருந்துகள்  தயாரிக்கும் முறை

நமது ஆதி மருத்துவ முறையின் மூலம் குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகளை தயாரித்து  பயன்படுத்தும் முறைகளை காண்போம்.!

இதில் கூறியுள்ள மூலிகை மருந்துகளை உங்கள் தேவைக்கு தயாரித்து பயன்படுத்தலாம்.!
வியாபார நோக்கத்தில் தயாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.! ஏனெனில் அதற்கு முறையான பல அனுமதிகளை வாங்க வேண்டும்.!
அதோடு மூலிகைகளை தேவையான போது குறைவான அளவில் தயாரித்தால் தரமாக இருக்கும்.! அதிகமான அளவில் தயாரித்து இருப்பு வைக்கும் போது பல விதமான வேதி மாற்றம் ஏற்படும். இதைப்போக்கவே பல பெரிய  நிறுவனங்களின் மூலிகை தயாரிப்புகளில் இரசாயணத்தை கலந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.!
இதில் கூறப்படும் அனைத்து மூலிகை மருந்துகளும் எனது குரு வடிவீஸ்வரம், பண்டிதர் கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் சூத்திரங்களின் மூலம் நாம் தயாரிக்கும் மூலிகைப்பொருட்களே இது 100% இயற்கையானது. துளியும் இரசாயணமில்லாதது.!

இது ஒரு பாரம்பரிய மருந்து இதை தயாரிக்கும் அன்பர்கள் இதே முறையில் எந்த மாற்றமும் செய்யாமல்,துளியும் இரசாயணம் சேர்க்காமல்  அப்படியே தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.!

1.#மூலிகை பல்பொடி

1.வேப்பம் பட்டை 100 கிராம்
2.ஆலம்பட்டை 100 கிராம்
3.ஆவாரம்பட்டை 100 கிராம்
4.கருவேலம் பட்டை
 100 கிராம்
5.புதினாஇலை 50 கிராம்
6.கடுக்காய்தோடு 50 கிராம்
7.இந்துப்பு   50 கிராம்
8.மிளகு 10 கிராம்
9.நாயுருவி 10 கிராம்
10.வெட்டிவேர் 10 கிராம்
11.தான்றிக்காய் 10 கிராம்
12.கிராம்பு 25 கிராம்
13 மாசிக்காய்  20 கிராம்
14.கண்டங்கத்திரி வேர் 5 கிராம்
15.சிற்றரத்தை வேர்  5 கிராம்
16.ஏலக்காய் 5 கிராம்
17.எலுமிச்சைதோடு 5 கிராம்
18.சுக்கு 5 கிராம்

இந்தப்பொருட்களில் உங்களால் சேகரிக்க முடிந்தப்பொருட்களை சேகரித்து காயவைத்துக் கொண்டு மற்றவற்றை மூலிகை கடையில் வாங்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர  பல்லரிப்பு,வாய்நாற்றம். ஆரம்ப பல்சொத்தை,பல் பலவீனம் போன்றவை மாறுவதோடு நோய் எதிர்ப்பு ஆற்றலும் வலுப்படும்.!

2.மூலிகை #குளியல்பொடி

1.பூந்திக்கொட்டை 200 கிராம்
2.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
3.ரோஜாப்பூ 100 கிராம்
4.செம்பருத்திப்பூ 100 கிராம்
5.ஆவாரம்பூ 100 கிராம்
6.மல்லிகைப்பூ 100 கிராம்
7.சந்தனப்பட்டை 100 கிராம்
8.வேட்டிவேர் 100 கிராம்
9.விலாமிச்சுவேர் 100 கிராம்
10.துளசி இலை 100 கிராம்
11.புதினா இலை 100 கிராம்
12.கோரைக்கிழங்கு 100 கிராம்
13.சீகக்காய் 100 கிராம்
14 கார்போக அரிசி 50 கிராம்
15.அதிமதுரம் 50 கிராம்
16.கிச்சிலிக்கிழங்கு 50 கிராம்
17.தாமரைப்பூ 50 கிராம்
18.சிறுபயறு 400 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து  பொடித்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியர்வை சுரப்பிகளின் இயக்கம் சீராகி எலும்புகள் வலுப்படும். தோல் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கும் வந்திருந்தால் குணமாகும். இந்தப்பொடியை தேங்காய் தண்ணீர் விட்டு குழைத்து  முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் புதுப்பொலிவுடன் தோன்றும்.!

3.இயற்கை #ஊட்டச்த்துமாவு

1.கேழ்வரகு 250 கிராம்
2.வரகு 250 கிராம்
3.கம்பு 250 கிராம்
4.குதிரவாலி 250 கிராம்
5.கறுப்புகொள்ளு 250 கிராம்
6.மக்காச்சோளம் 250 கிராம்
7.தோல் உளுந்து 250 கிராம்
8.கறுப்பு கொண்டைக்கடலை 250 கிராம்
9.வேர்க்கடலை 250 கிராம்
10.பச்சை பட்டாணி 250 கிராம்
11.சிறுபயறு 250 கிராம்
12.மாப்பிள்ளை சம்பா/சிவப்பு அரிசி 250 கிராம்
13.ராஜ்மா 100 கிராம்
14.சோயா 100 கிராம்
15. பாதாம் பருப்பு 25 கிராம்
16 பிஸ்தா பருப்பு 25 கிராம்
17.முந்திரிப்பருப்பு 25 கிராம்
18.ஏலக்காய் 25 கிராம்
19.சுக்கு 25 கிராம்
20.அமுக்ரா கிழங்கு 25 கிராம்
21.பனங்கற்கண்டு 500 கிராம்

இந்தப்பொருட்களை முடிந்தவரை இயற்கையானதாக சேகரித்து சுத்தப்படுத்தி லேசாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு பசும்பால் அல்லது சூடுநீரில் கலந்து கொதிக்க வைத்து  காலை,மாலை இருவேளை அல்லது காலை,மதியம் உணவிற்கு முன் ஒரு டம்ளர் விதம் குடித்து வந்தால்,உடல் சோர்வு,எலும்பு பலவீனம்,அடிக்கடி நோய்ப்படுதல்,மலச்சிக்கல்,உடல் நடுக்கம், கைகால் வலி,முதுகுவலி போன்ற குறைபாடுகள் நீங்கும். ஆறு மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம்.!

4.#துளசிமாத்திரை

கருந்துளசி இலை 300 எண்ணம்
வால்மிளகு அல்லது குறுமிளகு 150 எண்ணம்
தேன் 2 தேக்கரண்டி சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் மைய்யாக அரைத்து சிறுசிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வைத்து நிழலில் ஒரு நாள் வெயிலில் ஒருநாள் என்ற விதத்தில் நான்கு நாள் காயவைத்து சிறிய கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சளி,இருமல்,தலைவலி,காய்ச்சல் வந்த சமயத்தில் வேளைக்கு இரண்டு விதம் நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாள் வரை உணவிற்கு பின் மாத்திரையை கடித்து உமிழ்நீரோடு சேர்த்து உண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்குவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும். வாழ்நாளில் புற்று நோயே வராமல் பாதுகாக்கும்.!

5.அமுக்ரா மாத்திரை

1.அமுக்ரா 250 கிராம்
2 .சுக்கு 150 கிராம்
3.கொத்தமல்லி 25 கிராம்
4.சீரகம் 25 கிராம்
5.தாளிசப்பத்திரி  25 கிராம்
6.சோம்பு 25 கிராம்
7.லவங்கப்பட்டை 25 கிராம்
8.சிறுநாகப்பூ 25 கிராம்
9.மிளகு 15 கிராம்
10.திப்பிலி 15 கிராம்
11.ஏலம் 15 கிராம்
12.லவங்கம் 15 கிராம்

மேற்கண்டப் பொருட்களை தூசி,துரும்பு நீக்கி சுத்தம் செய்து மூலிகை அரவை மில்லில் கொடுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிறிது பொடியில் பசும்பால் விட்டுப்பிசைந்து சிறுசிறு மாத்திரையாகப் உருட்டி இட்லி தட்டில் ஒரு வாழை இலை அல்லது  வெள்ளைத்துணியை விரித்து அதன்மேல் மாத்திரைகளை பரப்பி வைத்து இட்லி குண்டானில் இரண்டு டம்ளர் பசும்பால் விட்டு அதன் மேல் உருட்டிய மாத்திரை இருக்கும் தட்டை எடுத்துவைத்து மூடி ஆவியில் வேக வைத்து  எடுத்து ஒரு நாள் நிழல் மறுநாள் வெயில் என்ற விதத்தில் நான்கு நாட்கள் காயவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரமாய் வைத்துக்கொண்டு
வாய்வுத்தொல்லை,பக்கவாதம்,தூக்கமின்மை,நரம்புத்தளர்ச்சி,பசியின்மை,அஜீரணம்,ஆண்மைக்குறைவு,சோர்வு,இரத்த அழுத்தம்,கைகால் நடுக்கம்,காக்கை வலிப்பு,கர்பப்பை பலவீனம், தைராய்டு சீரின்மை போன்ற வியாதிகள் இருப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு மாத்திரையை வெறும் வயிற்றில் உண்டுவிட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்திகொள்ள வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் உணவோ நீரோ அருந்தாமல் இருக்கவேண்டும். இப்படியே 48 நாட்கள் கடைப்பிடித்தால் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும். நோய்த்தன்மை அதிகம் இருப்பவர்கள் இரவும் இதுபோல் இரண்டு மாத்திரையை உணவிற்கு பின் உண்டு வந்தால் மேற்கூறிய எத்தகைய வியாதியும் குணமாகும்.!

6.பஞ்சமூலி சூரணம்

1.ஆடாதோடை இலை 200 கிராம்
2.கடுக்காய் தோடு 200 கிராம்
3.நெல்லிவற்றல் 100 கிராம்
4.தான்றிக்காய் தோடு 50 கிராம்
5.சுக்கு 50 கிராம்

இந்தப்பொருட்களை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண் பொடியை அரை டம்ளர் சுடுநீரில் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். இது போல் 12 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை செய்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட நச்சுக்கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனால் உடல் பருமன்,கைகால் வலி,மலச்சிக்கல்,மூட்டுவலி,நாள்ப்பட்டச் சளி,தோல் நோய்கள்,சளி,இழுப்பு,சக்கரை வியாதி,காதிரைச்சல்,உடல் ஊறல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அதிகமான சளி இருப்பவர்கள் காலை,மதியம் இரு வேளையும் இந்த சூரணத்தை  தேனில் குழைத்து உணவிற்கு அரைமணி நேரம்  முன் உண்டு வந்தால் 24 நாளில் சளி முழுவதும் வெளியேறிவிடும்.!

7.மூலிகை தேனீர்

1.ஆவாரம்பூ 200 கிராம்
2.செம்பருத்திப்பூ 100 கிராம்
3.ஓரிதழ் தாமரைப்பூ 100 கிராம்
4.ரோஜாப்பூ 100
5.கொத்தமல்லி 50
6.சுக்கு 50
7.ஏலக்காய் 50 கிராம்
8.துளசிஇலை 50 கிராம்
9.வேட்டிவேர் 25 கிராம்

மேற்கண்ட பொருட்களை சுத்தம் செய்து வீட்டிலேயே பரபரவென பொடித்து வைத்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதைப் போலவே நீரிலோ,பாலிலோ கலந்து சூடாக்கி வடிகட்டி கற்கண்டு/தேன் கலந்து குடித்துவந்தால் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுப்படும் இரத்தசோகை குணமாகும்.!

8.புதினா தைலம்

1.புதினா உப்பு 20 கிராம்
2.ஓம உப்பு 20 கிராம்
3.பச்சைக்கற்பூரம் 40 கிராம்
தேங்காய் எண்ணெய் 20 மில்லி இந்தப்பொருட்களை ஒன்றாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது நேரம் குலுக்கினால் திரவம் போன்று திரண்டு வரும். இந்தக்கலவையை லேசாக தொட்டு தலைவலி நேரத்தில் தடவிக்கொள்ளலாம். மூக்கடைப்பு, சளி,போன்றவற்றையும் சரிசெய்யும்.!

9.நிலவேம்பு குடிநீர்

1 நிலவேம்பு 100 கிராம்
2.விலாமிச்சம் வேர் 100 கிராம்
3.வெட்டிவேர் 100 கிராம்
4.சந்தனச்சீவல் 1 100 கிராம்
5 பற்பாடகம் 100 கிராம்
6.கோரைக்கிழங்கு 100 கிராம்
7.பேய்ப்புடல் 100 கிராம்
8.மிளகு 100 கிராம்
9.சுக்கு  100 கிராம்

இந்த ஒன்பது பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து கசாய பதத்திற்கு  திருதிருவென இடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு கைகால் வலி,மூட்டுவீக்கம்,மூட்டுவலி,உடல்வலி,விசக்காய்ச்சல்,தோல் நோய்கள் வந்த காலத்திலோ அல்லது காய்ச்சல்,உடல்வலி போன்றவை வருவது போல் தோன்றும் சூழலிலோ ஒருத்தேக்கரண்டி பொடியை எடித்து ஒன்றரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது அரை டம்ளர் ஆனதும் இறக்கி வடிகட்டி  உணவிற்கு அரை மணி நேரம் முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! தேவையெனில் இதுபோலவே இரவிலும் ஒரு வேளை தயாரித்து குடித்து கொள்ளலாம்.!
நோய் இருப்பவர்கள் தொடர்ந்து 12 நாட்கள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். நோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் இதை அருந்த வேண்டாம்.! ஒவ்வாமை,குறைஇரத்த அழுத்தம்,குறை சக்கரை இருப்பவர்கள் இந்த மருந்தை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.!

எல்லா வகையான மருந்துகளை பயன்படுத்துவோரும் உப்பு,புளி,காரம்,அசைவ உணவு,இரசாயண உணவுகளை குறைத்துக்கொண்டால் உடனடியான பயன் கிடைக்கும்.!

இந்த பகுதியில் நாம் குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை நாம் குறிப்பிட்ட அதே அளவில் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.!
இந்த மருந்துகள் அனைத்தும் 100% இயற்கையானது என்பதால் இதன் பயனை உடல் உணர சிலருக்கு கொஞ்சம் தாமதமாகலாம்.!
ஆனால்,பயன் நிச்சயம் கிடைக்கும்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

இது போன்ற பல்வேறு மூலிகை மருந்து தயாரிப்புகள் இயற்கை வாழ்வியல் முறைகள் யோகா,தியான நுட்பங்கள்,வர்ம புள்ளிகள் இயக்கம் அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல் " *ஆதிமருத்துவம்*  "

384 பக்கம்
360 ரூ
 தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுங்கள்.

www.aumherbals.com
Mobile & Whats App
9629368389
9629131089

மூலிகை பயன்கள்

*ஆவாரையின் குணம்*

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக்  கொள்ளுங்கள். இந்தப்பொடியை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக்  கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.

புதிய ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு  நீரில் கலக்கி தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போகும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கற்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.!

🙏🏻நன்றி
பதிவேற்றியவருக்கு

www.aumherbals.com

Saturday, 8 September 2018

இசையோடு எனது பயணம்


மனதோடு பேசுகிறேன்

28.புதையல் மேல் அமர்ந்து
 யாசகம் கேட்டவன்  …

அதிகாலையில் யோகா வகுப்பிற்காக எனது எளிய வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது சில நாட்களில் எனக்குள்ளே ஒரு பாடல் கேட்கும். அது ஏற்கனவே வந்த திரைப்பட பாடலாக இருக்காது. இயற்கை,தமிழ்,யோகா,இறைநிலை உணர்வு என்று ஏதோ ஒரு தளத்தில் அது இராகமெடுத்து எனது பயிற்சியகம் வந்த பின்னே அடங்கும்.

முதலில் " உடலெனும் பொருள் கடந்து மனமெனும் கடல் கடந்து அருளெனும் ஆதியில் நுழைந்தேன் "

என்ற பாடலும் அதன் பின் " தேடுவதை நிறுத்து தேடியது கிடைக்கும் "

" கண்ணே பாப்பா கேளு
உணவில் இருக்கு வாழ்வு "

என்று பல்வேறு பாடல்கள் எனது இதய வீணையை மீட்டிக்கொண்டே வரும். இந்த பாடல்களை ஓய்வு நேரத்தில் சற்று ஒழுங்குப்படுத்தி  கைப்பேசியில் எனது குரலிலேயே பாடி பதிவு செய்து வைப்பேன்.

 இப்படியே ஒரு ஆறு பாடல்கள் சேர்ந்ததும் ஒரு சில எளிய இசையமைப்பாளர்களை நாடி இதை நானே பாடி வெளியிட வேண்டும். என்ற எனது எண்ணத்தை சொன்னதும் ஆளாளுக்கு ஒரு விலையை கூறினார்கள். சிலர் மட்டும் நேர்மையாக "நீங்க பாடினா யாரு கேட்பார்கள்? "
என்று கூறி மறுத்துவிட்டனர்.

அங்கே இங்கே சுத்தி நிறைவில் ஒருநாள் எனது பார்வதிபுரம் பயிற்சிமையம் அருகே இசை பள்ளி வைத்திருக்கும் ஜெபாவிடம் இதுபற்றி கூறியதும்.

"தாராளமா பண்ணலாம் " என்றதோடு; "எவ்வளவு ஆகும்" என்ற எனது அடுத்த கேள்விக்கும்; "பார்த்துக்கலாம்" என்ற இன்னொரு ஆறுதல் வார்த்தையும் கூறினார்.

அப்போது;
"ஒருவேளை நம்மை வைத்து ஏதாவது சிரிப்பு கிரிப்பு செய்து விடுவாரோ?" என்ற அச்ச உணர்வும் ஏற்பட்டது.  பிறகு அவர் ஏற்கனவே இசையமைத்து புஷ்பவனம் குப்புசாமி அய்யா பாடியுள்ள "என்னடா பழக்கம் தம்பி தம்பி அன்னைத் தமிழும் உன்னை நம்பி "  பாடலை கேட்டதும் தான் முழு உற்சாகம் ஏற்பட்டது.உடனே பணிகளை ஆரம்பித்து விட்டோம்.

நேற்று- முதல் பாடலாக " கண்ணே பாப்பா கேளு " பாடலை படக்காட்சியுடன் youtube சேனலில் வெளியிட்டு விட்டோம்.

பாடலும் காட்சியும் வெகு அருமையாக வந்துள்ளது.

இப்படி ஒரு பாடலையும் காட்சியையும் வேறு யார் எடுப்பதாய் இருந்தாலும் குறைந்தது ஒரு லட்சம் தேவைப்படும்.
அடியேன் அதில் பத்து சதவீதம் கூட செலவழிக்கவில்லை.

என்னோடு பாடிய இரு பாடகிகளான அக்சரா,அரோன் பெஃரின் இருவருமே பணம் வேண்டாம். என்றதோடு  பயணச்செலவை கூட பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

அரோன் பெஃரின் என்னோடு  தான் பாடிய வரிகளில் சிலவற்றுக்கு வீடியோவில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்தப் பாடலில் நடித்ததோடு இதற்கு நடனமும் அமைத்து கொடுத்த எனது யோக மாணவி இயற்கை குழந்தை ரிதன்யா. என்னோடு நடித்த யோகாசன சாம்பியன் நவ்யா,திவ்யா, அனு, ராகேஷ் போன்ற பலரும் மிக அருமையாக இந்தப் பணியில் ஒத்துழைத்துள்ளனர்.

ஒளிஓவியர் சகோதரர் தினேஷ் மிக அழகான காட்சி கோணங்களை அமைத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இடையில் அவர் குடும்பத்தில் ஒரு துக்கம் நிகழ்ந்து விட்டது அந்த பாதிப்பும் கூட பாடலில் சில  துண்டுக்காட்சியில் பதிவாகி உள்ளதை பாடலை பார்த்தாலே தெரியும்.

அது போலவே அன்னை ஆஸ்ரமம் சுகுமாரன் அய்யா அவர்களும் மிக கனிவாக பாடல் காட்சி பதிய தனது இடத்தை தந்து உதவினார். இப்படி பலரும் அருமையான முறையில்  உதவியதாலேயே இந்தப் பணி எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

நிறைவு பகுதியில் பாடலுக்கான சில காட்சிகள் எடுக்க இயலாமல் போன போது தனது கல்விக்கு விடுமுறை விட்டு வந்து காட்சிகளை எடுத்து தந்த எனது மகன் இஜாஷ். மற்றும் நடித்துள்ள பல்வேறு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என்று  அனைவருக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள்.!

தலைப்பிற்கு வருகிறேன் இசையமைப்பாளர் ஜெபாவிடம் "நான்  கேட்டது இசை யாசகம் அவர் எனக்கு கொடுத்துள்ளதோ பெரும் இசைப்புதையல் " உண்மையில் அவர் ஒரு சகலகலா வித்தகர்; பாடலின் சில வரிகளை  நீக்கி, சில வாக்கியங்களை சேர்த்து,எழுத்தை அழுத்தி, அழகாக்கி என்று தனது பணிகளில் மிக திறமையாக இயங்கி உள்ளார்.
இசை கோர்ப்பு பணிகளில் உள்ள  அத்தனை ஆழங்களிலும் அநாயசமாக புகுந்து வந்து ஜாலம் செய்ததோடு
காட்சி தொகுப்பிலும் பல வித்தைகள் செய்துள்ளார்.!

இதோ,எங்களது அடுத்த பாடலும் தயாராகி விட்டது.

" பிறந்து சிறந்த மொழிகளுள் சிறந்தே பிறந்த தமிழே நான் இறந்து மீண்டும் பிறப்பினும் என் நாவில் மலர்ந்து ஒளி கொடு "

இந்த அற்புத படைப்போடு விரைவில் வருகிறோம்.

அதுவரை; "கண்ணே பாப்பா கேளு உணவில் இருக்கு வாழ்வு" பாடலை எனது, ஆதிமருத்துவம் youtube சேனலிலும் ஜெபாவின், JE publication you tube சேனலிலும் கண்டு மகிழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.!
நன்றியும், வாழ்த்துகளும் … இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ பிராத்தனைகளும் …!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

Thursday, 6 September 2018

இயற்கை வரம்

இயற்கை வாழ்வியலின் இணையற்ற படைப்பு

100 % இயற்கை முறையில்  குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ இந்த மூன்றுக்கும் ஒரே முறையிலான இயற்கை சோப்பை நான் தயாரித்து விட்டேன்.!

என்ன கொஞ்சம் விலை அதிகமாக ஆகிறது.  இதற்கான மூலப்பொருட்களான பூந்திக்கொட்டை,எலுமிச்சைச் சாறு,செக்கு தேங்காய் எண்ணெய், கார்போக அரிசி,அதிமதுரம் போன்ற அனைத்தும் உன்னதமான பொருட்கள்.

அரைக்கிலோ
மூலப்பொருட்களுக்கு 200 ரூபாய் ஆகிறது. ஐந்து சோப்புகள் தயாரிக்கலாம். மற்றொரு விசயம்.இது வேகமாக கரைந்து விடுகிறது.

 அதனால் தற்போது விற்பனைக்கு இல்லை.
இதற்கான செய்முறையை நமது ஆதிமருத்துவம் youtube சேனலில் விரைவில் பகிர உள்ளோம்.!

*இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்*

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

mobile 9629368389
www.aumherbals.com

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...