I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: July 2018

Saturday, 28 July 2018

தமிழறிவோம் தங்கங்களே

தமிழ் ஞானம்
அறிவோம்

இறை ஒன்று:
பரம்பொருள்.

இனம் இரண்டு:
ஆண்-பெண்.

தமிழ் மூன்று

1.இயல்
2.இசை
3.நாடகம்

திசை நான்கு

1.கிழக்கு
2.மேற்கு
3.தெற்கு
4.வடக்கு

அறம் ஐந்து
(வாழும் முறை)

1.நல்லோர் அறம்
2.இல்ல அறம்
3.துறவு அறம்
4.மன்னர் அறம்
5.உயிர் அறம்

நற்குணம் ஆறு

1.நிறைமனம்
2.பொறுமை
3.ஈகை
4.கற்புநெறி
5.சமநோக்கு
6.மன்னிப்பு

சுரம் ஏழு

1.ச - சட்சம்
2.ரி - ரிடபம்
3.க - காந்தாரம்
4.ம - மத்திமம்
5.ப - பஞ்சமம்
6.த - தைவதம்
7.நி - நிடாதம்

விடை எட்டு

1.சுட்டு
2.மறை
3.நேர்
4.ஏவல்
5.எதிர் வினா,
6.உற்றது உரைத்தல்,
7.உறுவது கூறல்,
8.இனமொழி.

கோள்கள் ஒன்பது

1.கதிரவன்
(ஞாயிறு)
2.சோமன்
(சந்திரன்)
3.நிலமகன்
(சொவ்வாய்)
4.அறிவன்
(புதன்)
5.சீலன்
(வியாழன்)
6.கங்கன்
(வெள்ளி)
7.காரி
(சனி)
8.கருநாகன்
(இராகு)
9.செந்நாகன்
(கேது)

உடைமை பத்து

1.மானப் பெருமை
2.குலப்பெருமை
3.கல்விவன்மை
4.அறிவுடமை
5.தானமுடைமை
6.தவமுடைமை
7.முயற்சியுடைமை
8.தாளாண்மை
9.இனிமையுடைமை
10.இல்லறமுடைமை.

தொகுப்பு:
ஆதிமருத்துவம்
ஏகப்பிரியன்

☘இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
9629368389
9629131089

www.aumherbals.com

Tuesday, 24 July 2018

செயலிகளின் கதை

மனதோடுபேசுகிறேன்

--ஏகப்பிரியன்---

26.நேரம் கொல்லும் செயலிகள்

"பழகுவதற்கு ஒரு செயலி
பகிர்வதற்கு ஒரு செயலி
பணத்தையும் பொருளையும் பரிமாற ஒரு செயலி
பாடுவதற்கு ஒரு செயலி
பலானதை பார்ப்பதற்கு
ஒரு செயலி
படுக்கையை பகிரவும் ஒரு
செயலி உள்ளதாம்
பாளும் அரசாங்கம் கூட
அரிசியை இறக்கும் ஒரு
செயலியை தேடுதாம்"

இப்படி மனித தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற எத்தனையோ செயலிகளை இறக்கி விட்டுள்ளது
நவீன உலகம்.

எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெறத்துடிக்கும் சோம்பல் இது போன்ற கணிணி வசதிகளை பயன்படுத்தி ஆனந்தம் கொள்கிறது.

விளையாட,உடற்பயிற்சி செய்ய,யோகா செய்ய எதிர் பாலினத்தின் அழகை இரசிக்க அரசியல் கட்சி தொடங்க என்று எல்லா தளத்திலும்  செயலி வேகமாக செயல்படுகிறது.

என்னது, செயலினா என்னவா?  நல்லா கேட்டீங்க போங்க.! சரி தமிழில் சொல்றேன். செயலி என்றால் APP.  நமது ஆரோக்கியத்திற்கும் நேரத்திற்கும் நாமே வைக்கும் ஆப்பு.இது என்றால் அது மிகையாகாது.

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சில APP கள் மனிதர்களுக்கு பல உதவிகளை செய்வது உண்மைதான்.

ஆனால்,சமீபகாலமாக நிறைய,நிறைய செயலிகள் வந்து கொண்டே உள்ளன.

ஒரு செயலியை வடிவமைத்து அதை லட்சக்கணக்கானவர்களை பயன்படுத்த வைத்து விட்டால் அதை தயாரித்தவர்களுக்கு கோடிகளில் வருமானம் குவிய வாய்ப்புள்ளது.

ஆனால், இதனால்  அப்பாவி மக்களில் பலரும் கணிணி அடிமையாகவும் நோயாளிகளாகவும் மாறிவருகிறார்கள். ப்ளுவேல் போன்ற அப்களால் பலரும் தற்கொலை கூட செய்துள்ளனர்.

சைனா போன்ற ஒரு சில நாடுகளில் வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்ற சாதாரண செயலிகளை கூட எல்லோரும் பயன்படுத்த முடியாதபடி தடுத்து முறைப்படுத்தி உள்ளனர்.

உலக குப்பைகளை விலை கொடுத்து கொட்டச் சொல்லும் நமது இந்தியாவில் வலை இணைப்பு மட்டும் இருந்தால் போதும். எல்லா அப்புகளையும் மடியில் கட்டிக்கொள்ளலாம்.

இதெல்லாம் ஒரு பெரிய காலக் கொடுமை. மக்கள் பெரும்பாலும் அப்பாவிகள். தங்களுக்கு என்னப் பிடிக்குமோ அவை எல்லாவற்றுக்கும் ஒரு  செயலி இருப்பதால் அனைவரும் அதில் இயல்பாகவே இணைந்து விடுவதோடு  தங்கள் நேரத்தையும் இழந்து,உடல் நலத்திற்கும் பெரிய கெடுதலை செய்து கொள்கிறார்கள்.

சூதாட்ட அப்பில் சேருபவர்கள் இதோடு இலட்சக்கணக்கில் பணத்தையும் இழக்கிறார்கள்.

பாட்டுப்பிடிக்காத, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்காத மனிதர்களை  காண்பது அபூர்வம். இப்படிப்பட்டவர்களுக்காகவே smule என்ற பெயரில் பிரபலமான ஒரு செயலி இருக்கிறது.

ஆன்ராய்டு கைப்பேசியில் இலவசமாக தரவிறக்கம் செய்து  கொள்ளலாம். பிறகு தேவையானால் சிறிய தொகையை கட்டினால் vip  ஆக்கிவிடுவார்கள். நாட்டில் நீங்கள் ரெம்ப முக்கியமான நபராக மாறனும்னா பல சாதனைகளையோ, கோல்மால்களையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ பண்ணணும். ஆனா,ஸ்மூல்  ஆயிரத்து நூறு கட்டினா உங்களை ஒரு வருசம் முக்கிய பிரமுகர வைக்கிறது.

ஒரு வருசம் கழிச்சிப்பார்த்தால்  உங்கள் SPB குரல் கூட MR.ராதா  குரலா மாறி இருக்கும் வாய்ப்புண்டு.!

ஆமாங்க,தினமும் உங்களை ஐம்பது பேர் பாட கூப்பிடுவாங்க. (அப்பில்) நீங்களும் அய்யோ சித்ரா,கூப்டுறாங்க,ஜானகி கூப்டுறாங்க, ஜேசுதாஸ் கூப்பிடுறாருன்னு தினமும் குறைந்தது பத்து பாடலாவது பாடுவீங்க. இதுல G.V.பிரகாஷ், சின்மயி எல்லாம் தனியா பாடின டிராக் இங்க போன உடனேயே உங்க தளத்தில் வரும். தேவைனா அவங்களோடவும் நீங்க பாடி உங்கள் நண்பர்களிடம் காட்டி பெருமை பட்டுக்கலாம்.

இதுபோக தமன்னா,எலியானா,நயன்தாராவை  விட அழகழகான பொண்ணுங்க  சிங்கப்பூர்,மலேசியா,இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இருந்து வந்து உங்களை ப்ளீஸ் ஜாய்ன்னு சொல்லி பாடக் கூப்பிடுவாங்க.!
(ச்சே அவசரப்பட்டு இளமையிலேயே கல்யாணம் பண்ணிட்டமோ?)

அட, உண்மைதாங்க.! இளம் பெண்கள் மட்டும் இல்லை. சின்னஞ்சிறு பிள்ளைகள் வயதான பாட்டிகள் எல்லாம் கூட "என்னோட பாடுங்க, என்னோட பாடுங்கனு " உங்களத் துரத்துவாங்க போங்க.!

பெண்களையும் இப்படி பலரும்  விரும்பி பாட கூப்பிடுங்க. அவங்க ஏற்கனவே பாடின வீடியோவை எடுத்து நாமளும் பாடினா அப்படியே இரண்டும் ஒன்றாகி நமக்கு வந்து விடும்.

ஒவ்வெரு பொண்ணுக் கூடவும்  கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சேர்ந்து  பாடின பாடல் எல்லாம்  இங்க சாதாரணமா கிடைக்கும்.

உங்கள் இளவயது  பொண்ணோ,பையனோ பல ஜோடிகளோடு சேர்ந்து  மன்மத ராசா மன்மத ராசானு பாடுன வீடியோ ஒவ்வென்றையும் தனித்தனியா பார்த்தா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.!

வெளியில பர்தா போட்டு முகத்தை மூடிட்டுப் போற பல இஸ்லாமிய பெண்கள் கூட ஸ்மூலில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடானு ஒரு நூறு பேரோட சேர்ந்து பாடின வீடியோ இங்கன கிடக்கு.!

என்ன ஒரு சவுகரியம்னா, அவங்க வீட்டில் உள்ளவர்களோ உறவினர்களோ யாராவது ஸ்மூலில் இருந்தால் தான் இது வெளிய தெரியும். (அந்த தாடி வாலக்கள் தான் இங்கன வரமாட்டாய்ங்களே)

இங்கனக்குள்ள இப்படி பாடிட்டு, பாடுனவன் கூட ஒடுனதுகளும் உண்டு. கணவனுக்கு பாடத் தெரியலைனு நல்லாப் பாடுனவனோட கூடுனதும் உண்டு.உள்ளே (இன்பாக்ஸ்) தனியாக பேசுதல்,வழிதல் அழுதல் எல்லாம் இங்கு சகஜம்.!

ஒரு அம்மா என்கிட்ட சொல்லுது.
"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்னு, நான் உள் கதவை மூடிட்டி  வேற ஒருத்தி புருசனோட  பாடிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த என் புருசன் கதவை வெளிப்புறமா பூட்டிவிட்டு மூன்று மணி நேரம் கழிச்சிதான் திறந்துவிட்டார்." அப்படின்னு; அப்புறம் என்னாச்சினு நான் கேட்டா " வெறென்ன,இன்னும் நாலஞ்சி பாடல் பாடிட்டு வந்து அந்த பாவத்துக்கு சோறுபோட்டு குடுத்தேன்னு சொல்லுது.!
(பொண்ணு பாக்கும் போது ஸ்மூலில் பாடுவியானு கேட்டுக்கங்கப்பா நேரத்துக்கு சோறு முக்கியம்)

ஒருத்தர் மளிகை கடையில் உட்கார்ந்துகிட்டு  கைப்பேசியில் " விழியிலே உன் விழியில் மௌனமொழி பேசும் அன்னம்னு " SPB பாடலை கவுண்டமணி குரலில் பாடிகிட்டு இருக்கும் போது ஒரு பெண் கடைக்கு வந்து " அண்ணாச்சி  ரெண்டு கிலோ அரிசி கொடுங்கனு பல முறை கேட்க, இவரும் பாட்டை பாதில விட்டுட்டு அரிசிய எடுத்துக் கொடுத்ததும்; "ஏம்ணாச்சி வீட்ல உலய வெச்சிட்டு அரிசி வாங்க வந்தா,கடய தொறந்து வெச்சிட்டு,பழய பாட்டப்பாடி  எந்தப் பாட்டிய கவுத்துட்டு இருக்கிய? காலக்கொடும சீக்கிரம் கல்யாணம் பண்ணுவே." என்று அந்தப்பெண் சொல்லி விட்டு  போன பின்,மீதி பாடலையும் பாடி வெக்கமே இல்லாம அதையும் தனது தளத்தில் வைத்துள்ளார் அந்த நண்பர்.!

எனக்குத் தெரிஞ்சி ஸ்மூலில் பாடுவதில் 90% காக்கா குரலில் தான் பாடுது.
ஒரு சிலருக்கு நல்ல குரல்வளமும், சங்கீத ஞானமும் இருந்தால் கூட தொடர்ந்து பல பாடல்களை, தொண்டைக் கட்டிக்கொண்ட பின்னும் பாடி பயமுறுத்துகிறார்கள்.

ஒரு சில பேர் மட்டும் மிகமிக சிறப்பாக பாடுகிறார்கள். அவர்களை கூர்ந்து கவனித்ததில் அவர்கள் மிக குறைவாக பாடுவதையும் ஒவ்வெரு பாடலைப் பாடுவதற்கு முன்பும் பலமுறை ஒத்திகை செய்து பாடுவதையும் உணர முடிகிறது.

நீங்கள் SMULE இல் விஐபி ஆக பணம் கட்ட வில்லை என்றால் உங்களால் தனிப்பாடல்களை பாட முடியாது என்பதோடு மற்றவர்களோடு சேர்ந்து பாடினாலும் பலப் பாடல்கள் பாதியிலேயே கட்டாகி விடும்.

இதில் vip ஆவதற்கு கிரெடிட் கார்டிலிருந்து தான் பணம் கட்ட முடியும். என்றிருப்பதால்  பலரால் அதை உடனே செய்ய முடிவதில்லை.
கைப்பேசி எண்ணில் இருந்து லாக்இன் செய்தால் மூன்று நாள் இலவச விஐபி இருக்கும்.
நான் இதுவரை மூன்று கணக்குகளை ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 பாடல்களை இதில் பாடி இருக்கிறேன்.!
எனது பாடலை கேட்பவர்கள் பலரும் ஏன் இந்த கொலை வெறி? என்று கண்ணை உருட்டுகிறார்கள்.!

ஆனால்,என்னோடு இணைந்து பாடும் தோழிகளோ என் குரலை ஆகா, ஓகோனு புகழ்கிறார்கள்.!

இல்லைனா,மீண்டும் அவங்களோட பாட மாட்டேன்னு நினச்சி இப்படி ஒரு பொய்யை அழகாக சொல்கிறார்கள் போல.!

இந்த செயலியில் பங்கேற்பாளராக உள்ள பலரும் ஸ்மூல் கம்பெனியில் பணிபுரிபவர்கள்.
குறிப்பாக தன் முகத்தை வீடியோவில்  காட்டாமல் பாடும் பலரும்,பல கணக்குகளை வைத்துக் கொண்டு இந்த செயலியை வேகப்படுத்த இயங்குகிறார்கள.

இப்பொழுது star maker போன்று  பாட்டுக்கு பல புதிய செயலிகளும் வந்து கொண்டே உள்ளன.! 

இவை எல்லாம் சேர்ந்து இன்னும் எவ்வளவு நேரம் கொல்லுமோ, எத்தனை மனிதர்களை பாட்டு பைத்தியங்களாகவும் செயலி பைத்தியங்களாகவும் மாற்றுமோ தெரியவில்லை.!

மனிதர்கள் தனக்கு தீங்கின்றி உதவும் செயலிகளை மட்டும் முறையாக பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.!
பல செயலிகள், மனிதனை செயல்படாமல்  முடக்குவதை
உணர வேண்டும்.!

www.aumherbals.com

இயற்கை காப்பி

இரத்த சோகையை குணப்படுத்தும்
கருப்பட்டி காப்பி

சுக்கு, மிளகு, சீரகம், மல்லி .... இவற்றை சம அளவு எடுத்து ஒன்றும் பாதியுமாக பொடித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது தண்ணீரை காய்ச்சி ... கருப்பட்டி போட்டு கூடவே தேவைக்கு இந்த பொடியை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இளம் சூட்டுடனே குடிக்க வேண்டும். வீட்டில் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, தூதுவளை செடிகள் இருப்பின் சில இலைகளையும் விருப்பப்பட்டால் இத்துடன்  சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். இதை தினமும் இரண்டு வேளை  பருகுவதால் சோர்வு, இருமல், காய்ச்சல், சளி காணாமல் போவதோடு இரத்த
சோகையும் நீங்கும்.!
(வழக்கமான காப்பி தேனீரை அதிகம் அருந்தினால்
இரத்தசோகை ஏற்படும்)

www.aumherbals.com

Friday, 20 July 2018

இதயமே இதயமே

இதயங்களை வெல்லுங்கள்
வெற்றிகளை அள்ளுங்கள்

1.அனைவரிடமும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுங்கள்.
2.தங்கள் வேலைகளையும் தனக்கான கடமைகளையும்
சரியாக செய்பவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.
3.உங்களோடு இருப்பவர்களின் நல்ல முயற்சி, ஆசை, கனவுகள் நிறைவேற உதவி புரியுங்கள்.
4.எல்லாம் எனக்குத் தெரியும் என்று எண்ணாமல் பிறர்
சொல்வதை முழுதாக கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள்.
5.பிறர் செய்யும் காரியங்களில்
நீங்கள் தவறு என்று தெரிந்து கொண்டதை; அல்லது நீங்கள் அப்படி எண்ணுபவற்றை  குற்றம் சாட்டும் வகையிலோ அல்லது நான் சொல்வது தான் உண்மை. என்ற; ரீதியிலோ பேசாமல், கனிவாக எடுத்துக்கூறி உண்மையை
உணர்த்த முயலுங்கள்.
6.சாதி,மத,கட்சி,வியாபார ரீதியிலான லாபங்களை மட்டும் கருதி யாரோடும் பழகவோ,பேசவோ செய்யாதீர்கள்.
7.எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் உங்கள் சிரிப்போ,கேலியோ பிறரை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
8.எதிர் பாலினத்தாருடன் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகாதீர்கள்.
9.தினமும் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
10.கேட்காமல் யாருக்கும் ஆலோசனை கூறாதீர்கள்.
11.உங்கள் செயல்களில் வெற்றி பெற திட்டமிட்டு உழைப்பதோடு அடிக்கடி புதிய
வழிமுறைகளையும் கையாளுங்கள்.
12.எப்பொழுதும் உங்கள் கல்வி, வேலை, உடல் நிலைக்கு தகுந்த பொருத்தமான,பிறர் கண்ணை உறுத்தாத எளிய உடைகளையும் அணிகலன்களையும் மட்டும் அணியுங்கள்.
13.உங்கள் சிந்தனைகள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சாதனையாக மாற உங்களோடு இணைந்து பணியாற்ற மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.!
14.நீங்களோ உங்களை சார்ந்தவர்களோ தப்பு செய்து விட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு அதற்கான தண்டனை யையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.!
15.பிறர் செய்த உதவிகளை எப்பொழுதும் நினைவு கூறுபவர்களாக  நன்றி உடையவர்களாக வாழுங்கள்.!

*உலகில் உள்ள மாபெரும் சாதனை மனிதர்களையோ அல்லது நமது சுற்றுப்புறத்தில் உள்ள நல்லவர்களையோ கூர்ந்துப் பார்த்தால் அவர்களிடம் இந்த குணங்கள் மிகமிக அடிப்படையாக இருப்பதை தெளிவாக காணலாம்;✌*
நீங்களும் அவ்வாறு மாமனிதனாக வாழ வாழ்த்துகள்.!
இந்தப்பதிவை படித்ததற்கு மிகமிக நன்றி🙏🏻
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
🌳AUM HERBALS
MOBILE 9629368389
9629131089
www.aumherbals.com

இயற்கையின் அழைப்பு

ஆதிமருத்துவம்
(இயற்கை வாழ்வியல் பயிற்சி)

திருப்பூர்

*இயற்கை மருத்துவ வரலாறு
*உடலியல் செயல்பாடு
*இயற்கை உணவுமுறை
*யோகாசனம்
*ஆனந்த தியானம்
*உடல் சுத்திகரிப்பு முறைகள் *வர்மப்புள்ளிகளை
இயக்கும் முறை
*எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
*இயற்கை பிரசவ வழிமுறை
*பிரபஞ்ச ஆற்றலை கவரும் மந்திர சொற்கள்
*பிராணசிகிட்சை
*அவசரகால முதலுதவி முறைகள்
*காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களை நீக்கும் இயற்கை
வாழ்வியல் நுட்பங்கள்.!

பயிற்சியாளர்:
ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

நாள்:
ஆகஸ்ட்  19,ஞாயிறு
நேரம்: 9.00 am and
3.00 pm

வள்ளலார் வாழ்வியல் மையம்
14,புதுதோட்டம்,
இரண்டாவது வீதி,
ஷெரிப் காலணி,
திருப்பூர்-4

நன்கொடை:501/-
(மதிய உணவு உட்பட)

தொடர்பிற்கு:8015179187 9787374200
www.aumherbals.com

#முன்பதிவுஅவசியம்

Monday, 16 July 2018

உறுப்பை காக்கும் வழி

பிறப்புறுப்பை
பாதுகாப்போம்

1.சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால்  முடிந்தவரை அதை சீக்கிரமாக நிறைவேற்றி விடுங்கள்.

2.தரையில் குதிகால் உயர்த்தி  அமர்ந்து சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது.

3.சிறுநீர் கழித்து முடிந்ததும் ஆண்கள்  மூன்றுமுறை குறியை உதறிவிட்டு சிறிது நீர் வைத்து மூன்று முறை கழுவி விடுங்கள்.

4. பெண்களும் இதுபோல் அமர்ந்து சிறுநீர் கழித்த பின்பு இன்னும் கொஞ்சம் முக்கி சிறுநீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மூன்று முறை வெறும் நீரால் கழுவிக்கொள்ளலாம்.

5.பெண்கள் மாதந்திர நாட்களில் வீட்டிலேயே எளிய முறையில் தயாரித்த நாப்கின்களையோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள பருத்தித் துணிகளையோ மட்டுமே பயன்படுத்துங்கள். எந்த கம்பெனி நாப்கின்களையும் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

6.இதனால் பிறப்புறுப்பு நமச்சல் இல்லாமல் இருப்பதோடு உடல் சூடும் குறையும். சிறுநீர் தொற்று ஏற்படாமல் அந்த இடம் சுத்தமாகவும்  பாதுகாப்பாகவும் விளங்கும்.

7.குழந்தைகள் வீட்டில் உள்ள போது நல்ல பருத்தியிலான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொள்ளப் பழக்குங்கள். படுக்க வைக்கும் போது ஒரு  வெள்ளைத்துணியை விரித்து படுக்க வையுங்கள்.
ஒன்றுக்கு இரண்டுக்கு போய் விட்டால் துணியை மாற்றியோ அல்லது சுத்தம் செய்தோ மீண்டும் பயன்படுத்தலாம்.
மிக அவசியமான தருணத்தில் மட்டும் கழிவுதாங்கிகளை பயன்படுத்துங்கள்.

8.மாசு நிறைந்த ஆறு, குளம்,குட்டைகளில் குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள்.

5.வீட்டில் குளிக்கும் போது, குளிர்ந்த நீரில், இயற்கை குளியல் பொடியை தேய்த்து குளியுங்கள். அல்லது தேங்காய் எண்ணெயில் தயாரித்த  குறைந்த அளவு இரசாயணம்  கலந்த சோப்பைப் போட்டு வழுவழுப்பு போகும் வரை அந்த இடத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தம் செய்து குளியுங்கள்.

6.எல்லோருமே உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள். குறிப்பாக யோகா,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் போது கண்டிப்பாக உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

7.உள்ளாடைகளை வாசனை சோப்பு போட்டு தனியாக நிறைய நீர்விட்டு கழுவி வெயிலில் காயப்போட்டு எடுங்கள்.

8.தினமும் துவைத்த உள்ளாடைகளையே  அணியுங்கள்.

9..ஜீன்ஸ் போன்று உள்ளுறுப்புகளை அழுத்தும் ஆடைகளை முடிந்தவரை தவிருங்கள்.

10.யோகாசனம் செய்யும் போது ஜனன உறுப்புகளை அழுத்தும் பாதஹஸ்தாசனம்,கோமுகாசனம்,சர்வாங்காசனம்,சிரசாசனம்  போன்ற ஆசனங்களில் தேவையான சிறிய மாற்றங்களை செய்து கொண்டு பழகுங்கள்.

11.மாதத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இல்லற வாழ்வில் ஈடுபடுங்கள். 

12.உங்கள் துணை அல்லாத வேறு யாருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

13.வெள்ளைப்படுதல்,விந்து ஒழுக்கு போன்ற வியாதிகள் இருப்பவர்கள் கூட மேற்கண்ட வழி முறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து  தினமும் உணவில்  50 % சமைக்காத காய்கறி,பழங்களை எடுத்துக்கொண்டால் மேற்கண்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

14.ஒவ்வெரு முறை சிறுநீர் கழித்த பின்னும் ஒரு டம்ளர் நீர் குடிப்பதை எப்பொழுதும் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மூத்திரக்கடுப்பு,எரிச்சல் போன்றவை எப்பொழுதுமே ஏற்படாமல் இருக்கும்.!

15.சிறுவர் சிறுமிகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கு சாக்லேட்,பிஸ்கெட்,ரொட்டி, பிராய்லர், சிக்கன்,முட்டை,ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,பெப்ஸி,சுத்திகரித்த நீர்  போன்ற இரசாயண உணவுகளை  சாப்பிடுவதே முக்கியக்காரணம். இது போன்ற இரசாயண  உணவுகளை முடிந்த அளவு குறைத்து விட்டு தினமும் பத்ராசனம் என்ற யோகாசனத்தையும் உஷ்ட்ராசனம் என்ற யோகாசனத்தையும் ஒரு முறைக்கு 15 விநாடிகள் விதம் நான்கு முறை செய்து வந்தால் சரியாகிவிடும்.

16.வயதான பெரியவர்களுக்கு வரும் சொட்டு மூத்திரம் உள்ளிட்டப் பிரச்சனைகளுக்கு மூத்திரப்பை பலவினமே முக்கியக்காரணமாக இருக்கும். தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்தல் நல்ல உணவுகளை சாப்பிட்டல்,மனதை அமைதியாக வைத்தல், தினமும் தியானம் செய்தல் போன்றவவற்றை கடைபிடித்தால்
இது சரியாகிவிடும்.!

மேற்கண்ட வழிமுறைகளைப் பேணி என்றும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

*🍁100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*

☘AUM HERBALS
M & W 9629368389
9629131089
www.aumherbals.com

Sunday, 15 July 2018

காதுகேளாமை குணமாக

புலிப்பாணி சித்தர் அருளிய மிளகாய் தைலம்

மிளகாய் 1 துலாம் (3500 gm ),சதைத்துப்போட்டு
தண்ணீர் 21 லிட்டர்,
பாண்டத்தில் இட்டு எட்டில் ஒன்றாக வற்ற காய்ச்சி வடிகட்டி,அதில் நல்லெண்ணெய் 750 மிலி  விட்டு கலக்கி, 40 கிராம் மிளகை மேற்படி கசாயத்தை விட்டு நன்கு மெழுகு பதம் அரைத்து, எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து மெழுகு பதத்தில் வடித்து வாரம் இரு முறை முழுகி வர ,
நீர்செரிப்பு ,
திமிர்வாதம் ,
சோகை ,
மண்டைக்குத்து ,
உடல்வலி,
சூலை,
புடைசூலை ,
மேக வாய்வு,
சொறி சிரங்கு ,
காதடைப்பு ,
காது குத்தல் ,
முதலியவை தீரும்.

-இணையப்பகிர்வு

Saturday, 14 July 2018

ஆண்மைக்கு மருந்து

ஆண்மை குறைவு நீங்க
பூனைகாலி விதை முருங்கை விதை அரசம் விதை சாதிக்காய் மதனகாமப்பூ ஓரிதழ்தாமரை கிராம்பு ஆனை நெருஞ்சில்விதை இவை வகைக்கு 100 கிராம் சாம்பிராணிபதங்கம் நீர்முள்ளி விதை இவை வகைக்கு 50 கிராம் இவைகளை பொடித்து தேவையான அளவு தண்ணிர் விட்டான் கிழங்கு சாறும் முருங்கைப்பூ சாறும் விட்டரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக்கி கொண்டு இரவில் 1-2 மாத்திரை பாலுடன் கொள்ள ஆண்மை குறைவு நீங்கும்.

-இணையப்பகிர்வு

Friday, 13 July 2018

அனைவருக்கும் இயற்கை

ஆதிமருத்துவம் இயற்கை வாழ்வியல் வகுப்பு  இன்று நாகர்கோவிலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

Wednesday, 11 July 2018

பித்தக்கல் கரையும்

*பித்தப்பை கல் கரைய சிறு நீரக கோளாறுகளுக்கு*
பழைய மண் சட்டியில் படிகாரம் உருகி வரும் போது வெடியுப்பு சேர்த்து பொங்கும் போது வெங்காரம் சேர்த்து பொரித்து எடுத்து கல்வத்திலிட்டு தூளாக்கி வைத்து கொள்ளவும்  பித்தப்பை கல் கிட்னி கோளாறுகளுக்கு பாலில் நீராகாரத்தில் கலந்து கொடுக்கலாம்
சீனிக்காரம் 500 கிராம்
வெடியுப்பு 300 கிராம்
வெங்காரம் 200 கிராம் சேர்த்து பொரித்து எடுக்கலாம்.

இவற்றில் இரண்டு சிட்டிகை அளவு நெய்யில் குழப்பி சாப்பிட்டால் நன்று
மற்றும் low pressure. diabetic இருப்பவர் மருத்துவர்கள் ஆலோசனை படி சாப்பிட வேண்டும் இந்த மருந்து ரத்தத்தில் உப்பு .சர்க்கரை அளவை 1/2 மணி நேரத்தில் குறைந்தது விடும்  நன்றி 🙏🙏🌸🙏🙏

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...