I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உறுப்பை காக்கும் வழி

Monday, 16 July 2018

உறுப்பை காக்கும் வழி

பிறப்புறுப்பை
பாதுகாப்போம்

1.சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால்  முடிந்தவரை அதை சீக்கிரமாக நிறைவேற்றி விடுங்கள்.

2.தரையில் குதிகால் உயர்த்தி  அமர்ந்து சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது.

3.சிறுநீர் கழித்து முடிந்ததும் ஆண்கள்  மூன்றுமுறை குறியை உதறிவிட்டு சிறிது நீர் வைத்து மூன்று முறை கழுவி விடுங்கள்.

4. பெண்களும் இதுபோல் அமர்ந்து சிறுநீர் கழித்த பின்பு இன்னும் கொஞ்சம் முக்கி சிறுநீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மூன்று முறை வெறும் நீரால் கழுவிக்கொள்ளலாம்.

5.பெண்கள் மாதந்திர நாட்களில் வீட்டிலேயே எளிய முறையில் தயாரித்த நாப்கின்களையோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள பருத்தித் துணிகளையோ மட்டுமே பயன்படுத்துங்கள். எந்த கம்பெனி நாப்கின்களையும் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

6.இதனால் பிறப்புறுப்பு நமச்சல் இல்லாமல் இருப்பதோடு உடல் சூடும் குறையும். சிறுநீர் தொற்று ஏற்படாமல் அந்த இடம் சுத்தமாகவும்  பாதுகாப்பாகவும் விளங்கும்.

7.குழந்தைகள் வீட்டில் உள்ள போது நல்ல பருத்தியிலான உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொள்ளப் பழக்குங்கள். படுக்க வைக்கும் போது ஒரு  வெள்ளைத்துணியை விரித்து படுக்க வையுங்கள்.
ஒன்றுக்கு இரண்டுக்கு போய் விட்டால் துணியை மாற்றியோ அல்லது சுத்தம் செய்தோ மீண்டும் பயன்படுத்தலாம்.
மிக அவசியமான தருணத்தில் மட்டும் கழிவுதாங்கிகளை பயன்படுத்துங்கள்.

8.மாசு நிறைந்த ஆறு, குளம்,குட்டைகளில் குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள்.

5.வீட்டில் குளிக்கும் போது, குளிர்ந்த நீரில், இயற்கை குளியல் பொடியை தேய்த்து குளியுங்கள். அல்லது தேங்காய் எண்ணெயில் தயாரித்த  குறைந்த அளவு இரசாயணம்  கலந்த சோப்பைப் போட்டு வழுவழுப்பு போகும் வரை அந்த இடத்தை நிறைய தண்ணீர் விட்டு சுத்தம் செய்து குளியுங்கள்.

6.எல்லோருமே உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள். குறிப்பாக யோகா,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் போது கண்டிப்பாக உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

7.உள்ளாடைகளை வாசனை சோப்பு போட்டு தனியாக நிறைய நீர்விட்டு கழுவி வெயிலில் காயப்போட்டு எடுங்கள்.

8.தினமும் துவைத்த உள்ளாடைகளையே  அணியுங்கள்.

9..ஜீன்ஸ் போன்று உள்ளுறுப்புகளை அழுத்தும் ஆடைகளை முடிந்தவரை தவிருங்கள்.

10.யோகாசனம் செய்யும் போது ஜனன உறுப்புகளை அழுத்தும் பாதஹஸ்தாசனம்,கோமுகாசனம்,சர்வாங்காசனம்,சிரசாசனம்  போன்ற ஆசனங்களில் தேவையான சிறிய மாற்றங்களை செய்து கொண்டு பழகுங்கள்.

11.மாதத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இல்லற வாழ்வில் ஈடுபடுங்கள். 

12.உங்கள் துணை அல்லாத வேறு யாருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

13.வெள்ளைப்படுதல்,விந்து ஒழுக்கு போன்ற வியாதிகள் இருப்பவர்கள் கூட மேற்கண்ட வழி முறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து  தினமும் உணவில்  50 % சமைக்காத காய்கறி,பழங்களை எடுத்துக்கொண்டால் மேற்கண்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

14.ஒவ்வெரு முறை சிறுநீர் கழித்த பின்னும் ஒரு டம்ளர் நீர் குடிப்பதை எப்பொழுதும் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மூத்திரக்கடுப்பு,எரிச்சல் போன்றவை எப்பொழுதுமே ஏற்படாமல் இருக்கும்.!

15.சிறுவர் சிறுமிகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கு சாக்லேட்,பிஸ்கெட்,ரொட்டி, பிராய்லர், சிக்கன்,முட்டை,ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,பெப்ஸி,சுத்திகரித்த நீர்  போன்ற இரசாயண உணவுகளை  சாப்பிடுவதே முக்கியக்காரணம். இது போன்ற இரசாயண  உணவுகளை முடிந்த அளவு குறைத்து விட்டு தினமும் பத்ராசனம் என்ற யோகாசனத்தையும் உஷ்ட்ராசனம் என்ற யோகாசனத்தையும் ஒரு முறைக்கு 15 விநாடிகள் விதம் நான்கு முறை செய்து வந்தால் சரியாகிவிடும்.

16.வயதான பெரியவர்களுக்கு வரும் சொட்டு மூத்திரம் உள்ளிட்டப் பிரச்சனைகளுக்கு மூத்திரப்பை பலவினமே முக்கியக்காரணமாக இருக்கும். தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்தல் நல்ல உணவுகளை சாப்பிட்டல்,மனதை அமைதியாக வைத்தல், தினமும் தியானம் செய்தல் போன்றவவற்றை கடைபிடித்தால்
இது சரியாகிவிடும்.!

மேற்கண்ட வழிமுறைகளைப் பேணி என்றும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

*🍁100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு*

☘AUM HERBALS
M & W 9629368389
9629131089
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...