இரத்த சோகையை குணப்படுத்தும்
கருப்பட்டி காப்பி
சுக்கு, மிளகு, சீரகம், மல்லி .... இவற்றை சம அளவு எடுத்து ஒன்றும் பாதியுமாக பொடித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது தண்ணீரை காய்ச்சி ... கருப்பட்டி போட்டு கூடவே தேவைக்கு இந்த பொடியை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இளம் சூட்டுடனே குடிக்க வேண்டும். வீட்டில் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, தூதுவளை செடிகள் இருப்பின் சில இலைகளையும் விருப்பப்பட்டால் இத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். இதை தினமும் இரண்டு வேளை பருகுவதால் சோர்வு, இருமல், காய்ச்சல், சளி காணாமல் போவதோடு இரத்த
சோகையும் நீங்கும்.!
(வழக்கமான காப்பி தேனீரை அதிகம் அருந்தினால்
இரத்தசோகை ஏற்படும்)
www.aumherbals.com
No comments:
Post a Comment