இரசாயண மனிதர்கள் 🎂
உங்கள் மனைவி வீட்டில் சமையல் செய்துகொண்டே இருக்கும் போது திடீரென்று தலை சுத்தி மயங்கி விழுந்து விடுகிறார். உடனே உங்கள் வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சேர்ந்து ஒரு வண்டியை பிடித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். மருத்துவர் நாடியைப் பார்த்துவிட்டு "எங்களால் முடியாது, வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்" என்று கூறுகிறார் அவர்களும் கொண்டு செல்கிறார்கள். அங்காவது உடனே அட்மிட் செய்து சிகிட்சை அளித்தால் கூட காப்பாற்றிவிட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த மருத்துவ மனையிலும் "எங்களால் முடியாது "என்று கையை விரித்துவிட; பக்கத்து நகரத்தில் உள்ள மற்றொரு நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையே உங்களுக்கும் யாரோ தகவல் கூறி நீங்களும் அங்கு செல்கிறீர்கள். அந்த மருத்துவ மனையில் உள்ள மருத்துவர் வந்து உங்கள் மனைவியின் நாடியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு " இவர் இறந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. "என்று கூறுகிறார்; இப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நேற்று இரவு உங்கள் வீட்டில் பிராய்லர் கோழி பிரியாணி நீங்கள், மனைவி. 12, 9 வயதில் இரண்டு பிள்ளைகள் நான்கு பேரும் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுகிறீர்கள். நடு இராத்திரி 2 மணிக்கு உங்கள் 9 வயது பெண் பிள்ளை வாந்தி எடுக்கிறது. உடனே உங்கள் மனைவி அவசரமாக பாத்ரூம் கூட்டிச்சென்று வாந்தி எடுக்க விடுகிறார். உங்கள் மகள் இரவில் சாப்பிட்டதை முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுகிறார். உடனே நீங்கள் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனை கொண்டு செல்கிறீர்கள் அங்கு உடனே அவசர வார்டில் அட்மிட் செய்து குளுக்கோஸ் அடைக்கிறார்கள், ஆன்டிபயாடிக் மருந்து செலுத்துகிறார்கள். " உங்கள் குழந்தைக்கு புட்பாய்சன் ஆகிவிட்டது. எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயலுகிறோம் " என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்களும் உலகில் உள்ள கடவுள்களை எல்லாம் அழைத்து பிராத்தனை செய்கிறீர்கள். ஆனால், விடியகாலை ஆறுமணிக்கு எங்களால் முடிந்தவரை பார்த்தோம். உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று மருத்துவர் கூறுகிறார்; அழுகிறீர்கள் குமுறுகிறீர்கள் வேறு என்ன செய்ய முடியும்?
உங்கள் மனைவி ஏழுமாத கர்ப்பிணி நீங்கள் வழக்கமா செக்கப் செய்யும் மருத்துவரிடம் சென்று காட்டிவிட்டு மதியம் இரண்டு பேரும் பிரபல ஓட்டலில் சிக்கன் பிரியாணி,ஐஸ்கிரீம் எல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வருகிறீர்கள். வீட்டிற்கு வந்தது முதலே உங்களுக்கு வயிறு அடைத்தது போன்ற ஒரு உணர்வு வருகிறது. சரியென்று கொஞ்சம் ஓய்வெடுக்கிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் மனைவி வயிறு மிகவும் வலிப்பதாக கூறுகிறார். நீங்களும் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்கள்.அங்கு உங்கள் மனைவியை பரிசோதித்த மருத்துவர்களோ; "குழந்தையின் தொப்புள் கொடி கழன்று விட்டதால் குழந்தை இறந்துவிட்டது. உடனே அறுவை செய்து இறந்த கருவை வெளியேற்ற வேண்டும். அல்லது தாய்க்கும் ஆபத்து என்கிறார்கள். " இப்பொழுது என்ன செய்வீர்கள்? அழுது அரற்றினாலும்,இறைவனை தொழுதாலும் போன உயிர் திரும்ப வராது. என்ற உண்மையை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.!
உங்கள் பதினைந்து வயது பையனுக்கு கண்வலி வருகிறது
மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்து வாங்கிப் போட்டு வருகிறீர்கள் … ஆனால், அடுத்தநாள் முதல் உங்கள் மகனுக்கு சுத்தமாக கண்ணே தெரியல. அதன் பிறகு எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் போன ஒளிதிரும்ப வில்லை இப்ப என்ன செய்வீர்கள்?
மேலே கூறிய மூன்றும் கதையல்ல எங்கள் ஊரில் நடந்த நிஜம்.!
இது போன்று ஒரே நிமிடத்தில் நமது அன்பானவர்களின் வாழ்வை பறித்து நம்மை நிலை குலைய வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை நான் பார்த்ததே இல்லையே; என்று கூறுகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் அதிஷ்டசாலிதான். ஆனால், இந்த அதிஷ்டம் நீண்ட நாள் நிலைக்காது. வெகுவிரைவில் துயர துரதிஷ்டம் உங்களை அடைந்தே தீரும்.! ஆனால், இதிலிருந்து தப்ப ஒரு வழி உள்ளது. அந்த வழியில் சென்றால் மட்டும்தான் நீங்களும் உங்கள் குடும்பமும், இந்த நாட்டு மக்களும் பிழைக்க முடியும்.! சரி இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்று ஆங்கில மருத்துவர்களை கேட்டால் "திடீர் ஹார்ட் அட்டாக், புட்பாய்சன், கரு பலவீனம், ஐகேன்சர், இரத்தஅழுத்தத்தை கவனிக்காமல் விட்டதால் வந்தது, சக்கரையை கட்டுப்பாட்டில் வைக்காததால் வந்தது , கொழுப்பை சாப்பிட்டதால் வந்தது, பிளட்லெட் குறைந்து விட்டதால், மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டதால் " என்று;பல காரணங்களை கூறுவார்கள். ஆனால், இது எதுவும் உண்மை இல்லை.! உண்மை காரணம் வேறு அது எந்த ஆங்கில மருத்துவருக்கும் தெரியாது; அல்லது தெரிந்தும் சொல்ல மறப்பார்கள்.! எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில மருத்துவரிடம் கேட்டேன்; "என்னங்க உயிர் போகும் நிலையில் அவசர சிகி்ச்சைக்கு வரும் நோயாளிகளை ஏன் உங்களைப் போன்ற சில மருத்துவர்கள் அட்மிட் செய்ய மறுக்கிறார்கள் " என்று; அதற்கு அவர் கூறினார். "தற்காலத்தில் இயற்கை உணவுமுறை, வாழ்க்கை முறை என்று அனைத்தும் சீரழிந்த நிலையில் உள்ளது. மக்களிடம் நாம் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு போன்ற சில நல்ல வழக்கங்களை கூறி கடைப்பிடிக்க சொன்னால், செய்ய மாட்டார்கள்; ஆனால் அவர்களின் உறவினரோ, குடும்பத்தினரோ நமது மருத்துவ மனையில் உயிர்விட்டு விட்டால் இந்த மருத்துவர்தான் எங்கள் உறவினரின் உயிரை கொன்றுவிட்டார். என்று பழியை நம்மீது போடுவதோடு , நமது மருத்துவ மனையைப் பற்றியும் தவறான வதந்திகளை பரப்புவார்கள்
. அதனால் தான் சீரியஸாக இருக்கும் நபர்களை அட்மிட் செய்ய என் போன்ற சிறிய மருத்துவ மனை மருத்துவர்கள் தயங்குகிறார்கள்" என்றார்; அவர். அவர் கவலை அவருக்கு.! "நாம் மேலே கூறிய வியாதிகள் மட்டுமல்ல திடீர் கிட்னி பெயிலியர், திடீர் பக்கவாதம், திடீர் உடல் உறுப்பு செயலிழத்தல் போன்ற அனைத்து நோய்களுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது என்ன வெனில் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலின் சீரழிவு. அதற்கு காரணம் இரசாயண உணவுப் பழக்கம் மற்றும் கரு உருவான நாள் முதல் தாய்க்கும் பிள்ளைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்ட இரசாயண மருந்துகளும் தான் அடிப்படை காரணங்கள்.! ஆங்கில மருத்துவம் கூறுவது போல உடலில் உள்ள ஒவ்வெரு உறுப்புக்கும் தனித்தனி
சிகிட்சை கிடையவே கிடையாது. வாயில் விசம் வைத்தால் வாய் மட்டும் சாகாது. உடலும் சேர்ந்தே சாகும்.! நரம்பில் விச ஊசி குத்தினால் நரம்பு மட்டும் மரணமடையாது உயிரும் சேர்ந்தே உயிர்விடும்.! வாயில் வைப்பது உணவா இரசாயண விசமா? என்பதிலும், நரம்பில் ஏற்றப்படுவது நோய்த்தீர்க்கும் மருந்தா அல்லது நோய்களை உண்டாக்கும் கிருமியா? என்பதையும் உணராமல்
உபயோகப் படுத்தும் மூடத்தனம்
மட்டும் ஒழிந்தால் போதும் ,
உலகின் மிகப்பெரிய இரசாயண சந்தையான, இந்தியாவின் குடிமக்களும் ஆரோக்கியமாக வாழ முடியும்.! இயற்கையை நோக்கி வாருங்கள் தங்கங்களே … "
இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ
உங்கள் பிணி எதுவானாலும்
அதை இயற்கை வழியில் வெல்ல
அழையுங்கள்.!
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் D.Y.T
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]
Mobile:9629368389,
9629131089
amyogatrust.com
Aum Herbals
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment