உடலை செதுக்கி இடையை சுருக்குவோம்
6.உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும் சில முக்கிய வழிமுறைகள்
1.எண்ணெய் குளியல்
வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் இரண்டு நாட்கள் உச்சி முதல் பாதம் வரை, உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து,15 முதல் 30 நிமிடங்கள் இளம் வெயிலில் நின்று,பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உடல் எடை சீராவதோடு உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபத்தின் இயக்கமும் சீராகி இழுப்பு,தைராய்டு,இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் ஏற்படாமல் இருக்கும்.
2.எண்ணெய் மசாஜ்
உடல் பருமன், இரத்த அழுத்தம்,உடல் வலி,மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் முறையாக மசாஜ் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு வாரம் ஒருநாள் அல்லது மாதம் இருமுறை சதைக் கசக்குதல் என்று கூறப்படும் மசாஜ் செய்து கொள்வதால் இரத்தக்குழாய்களிலும் உடல் தோலை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள இறந்த செல்கள் வேகமாகி வெளியேறி உடல் எடை உள்ளிட்ட வியாதியை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு புத்துணர்வையும் புதிய பொலிவையும் தரும்.!
3.வாமண தௌதி/சூரண தௌதி
ஆறு டம்ளர் நீரை சூடாக்கி அதில் சுமார் ஐம்பது கிராம் கல்லுப்பைப் போட்டு நன்றாக கலக்கி ஒவ்வெரு டம்ளராக நீரை வேகமாக குடித்துவிட்டு, அடிநாக்கில் விரல்களை வைத்து வாந்தி எடுங்கள். முதலில் தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்யலாம்.பிறகு மாதத்திற்கு இரண்டு நாட்கள் இந்தப் பயிற்சியையோ அல்லது 6 டம்ளர் சுடுநீரில் பஞ்சமூலி சூரணம் அல்லது திரிபலா சூரணம் ஐந்து தேக்கரண்டி கலந்து கலக்கி வேகமாக குடித்துவிட்டு வாந்தி எடுக்கலாம்.
இதனால் உடலில் உள்ள அதிகப்படியான சளி,பித்தம் போன்றவை வெளியேறி விடுவதோடு நரம்பு மண்டலமும் தூண்டப்பட்டு, புத்துணர்வு பெறும்.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கமும் சீராகும்.!
4.மண்குளியல்,
வாழை இலைக்குளியல்
மாதத்திற்கு இருமுறை மண்குளியல்,வாழை இலைக்குளியல்,சூரியக்குளியல்,நீராவிக்குளியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து வந்தால் அதிகப்படியான எடை வேகமாக குறைவதோடு, உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்கும்.!
5.எனிமா குடுவை,பேதிமருந்து
மாதத்திற்கு இரண்டு முறை எனிமா குடுவையில் 700 மில்லி வரை சுத்தமான நீரை நிறைத்து அதை ஆசன வாயில் சொருகி பெருங்குடலை சுத்தம் செய்து வந்தாலோ அல்லது மாதத்திற்கு ஒருமுறை இரவு உணவு சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்னால் ஒருத்தேக்கரண்டி திரிபலா சூரணத்தை இரண்டுத் தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயில் குளப்பி சாப்பிட்டு விட்டு,ஒரு டம்ளர் சுடுநீர் குடித்துவிட்டு படுத்தால், அடுத்தநாள் காலையில் ஒரிரு முறை வயிற்றை கலக்கி உடலில் தேங்கிய நாள்ப்பட்ட கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் மலக்கட்டு,புளித்த ஏப்பம்,இரத்த சுத்தமின்மை,இடுப்பு வலி,முதுகுவலி,மூட்டுவலி,கழுத்துவலி,வாய்வுத்தொல்லை,தோல்நோய்கள் போன்றவை குணமாவதோடு அதிகப்படியான உடல் எடையும் குறையும். மேற்கண்ட பேதி முறைக்கு பதிலாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாட்டு மருந்துக் கடையில் விற்கும் பேதி மாத்திரையையும் வாங்கி பயன்படுத்தலாம்.!
குறிப்பு: பேதி மருந்து,பேதி மாத்திரை தவிர மீதம் உள்ள அனைத்து பயிற்சிகளையும் காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது எளிய பழச்சாறுகளை அருந்தி,அரை மணி நேரம் கழிந்தோ செய்யலாம். வெறும் வயிறு என்பது காலை எழுந்ததும் 3 முதல் ஐந்து டம்ளர் நீரை குடித்து காலைகடனை முடித்த பின் இருப்பது.!
இவை தவிர ஏற்கனவே நாம் கூறியுள்ள தினமும் இரண்டு வேளை யோகா, உடற்பயிற்சி,கிரியை,தியானம்,மாதம் ஒருநாள் காய்கனி விரதம்,தினமும் ஒரு வேளை சமைக்காத உணவு,எந்த இரசாயண உணவுகளையும் எடுக்காமல் இருத்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறையையும் தொடர்ந்து கடைபிடித்து வர உடல் பருமன்,இரத்த அழுத்தம்,தைராய்டு,மன அழுத்தம் போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.!
*விழித்து எழுவதால் வெற்றி வருவதில்லை*
*விழுந்து எழுந்தாலும் வெற்றி கிடைப்பதில்லை சிறந்த முயற்சியும் தொடர்ந்த பயிற்சியுமே வெற்றியை விரைந்து வரவழைக்கிறது*
-ஏகப்பிரியன்
aumherbals.com
தொடரும் …
DO NOT SHARE
No comments:
Post a Comment