I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தொடர் விக்கல்,வாய்வு,தொண்டைக்கட்டு

Wednesday, 9 January 2019

தொடர் விக்கல்,வாய்வு,தொண்டைக்கட்டு

உடனடி நிவாரணம் தரும்
மருத்துவங்கள்

50 மில்லி தேங்காய் எண்ணெயில் 10 கிராம் அளவு கற்பூரம் சேர்த்து சூடாக்கி ஆறியதும் நெஞ்சி சளி இருப்பவர்கள் நெஞ்சி, தொண்டைக்குழி போன்ற இடத்தில் தடவி வந்தால் சளிபோகும். இந்த எண்ணெயையை தூங்கும் போது கைகால் உடலில் தேய்த்து படுத்தால் கொசுக்கடிக்காது.
கால் வெடிப்பில் இந்த எண்ணெயை பூசி வந்தால் வெடிப்பு மறையும்.

சுக்கு,வால்மிளகு,ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து லேசாக  வறுத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட தொண்டைக்கட்டு,
தொண்டை கரகரப்பு நீங்கும்.!

நான்கு நெல்லிக்காயை  இடித்து சாறு பிழிந்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நிற்கும்,உடல்சூடு தணியும்,இரத்தம் சுத்தமாகும்.!

கருவேப்பிலை,கல்லுப்பு,
சீரகம்,சுக்கு ,ஓமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட
 அஜீரணம் குணமாகும்,
 புளித்த ஏப்பம் மாறும்.!

வேப்பம்பூவை உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொண்டு அரைத்தேக்ககரண்டி பொடியை கால் டம்ளர் சுடுநீரில் கலந்து காலை உணவிற்கு பின் உட்கொள்ள வயிற்றுப்புண் ஆறும்.!

சிறிது வெந்தயத்தை நெய்யில் வறுத்து அரைத்து வைத்துக்கொண்டு அரைத்தேக்ககரண்டி பொடியை அரைடம்ளர் மோரில் கலந்து குடிக்க  வயிற்றுவலி நீங்கும்.!

புதினா இலையை நிழலில் உலர்த்தி இந்துப்பு சேர்த்து பொடித்து பல்துலக்கி வந்தாலோ புதினாவை அடிக்கடி மென்று வந்தாலோ பல்கூச்சம்
 விரைவில் மாறும்.!

30 கிராம் வசம்பை சுட்டு
கரியாக்கி அதனுடன்
தலா 50 மில்லி நல்லெண்ணெய்,
ஆமணக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய் கலந்து அடிவயிற்றில் தேய்த்து வர வயிற்றுப்பெருமல் புளித்த ஏப்பம் தீரும்.!

ஒரு சிறிய துண்டு வெல்லத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்து குழப்பி வேனல் கட்டியில் தடவி ஒரு வெற்றிலை துண்டை மேலே ஒட்டிவிட்டால் கட்டி பழுத்து உடைந்துவிடும்.!

சுக்கு,மிளகு,திப்பிலி,தாமரை இதழ் சம அளவாக எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு ஒருத்தேக்கரண்டி எடுத்து ஒன்றரை டம்ளர் நீரில்
கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் இறக்கி வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்குவதற்கு ஒரு
மணிநேரம் முன்பு குடித்து வந்தால்  இரத்த கொழுப்பு குறையும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...