I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine

Friday, 4 January 2019

*கண் குறைபாடு நீங்கும்*

கீழாநெல்லி,
கரிசலாங்கண்ணி,
கண்டங்கத்திரி
இலையை சம அளவாக
எடுத்து (சிறுதுண்டு)

அதனுடன் ஒரு
சிறிய கல்லுப்பு துண்டையும்
எடுத்து உள்ளங்கையில் வைத்து கசக்கினால் சாறு வரும்.

இந்தச்சாற்றை
அப்படியே தூரப்பார்வை
கிட்டப்பார்வை,
நிறக்குருடு,கண்புரை,
மாலைக்கண் நோய் கொண்டவர்களை
படுக்க வைத்து
வலது கண்ணிலும்
இடது கண்ணிலும்
(கண்பூழை சேரும் பகுதியில்)
மூன்று மூன்று துளிகள் விதம்
தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு
முறை விதம் மூன்று மாதங்கள்
விட்டு வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் குணமாகும்.

கண்ணில் மேற்கண்ட மருந்தை விட்டதும் சிறிது எரிச்சல் வரும் அதைப்பொருட்படுத்தாது வலம் இடமாக மூன்று  மூன்று சுற்றுகள் கண் இமைகளை சுழற்றி அப்படியே கண்களை
மூடி 3 நிமிடம் படுத்திருந்து
பின்னர் மெதுவாக
எழுந்து விடலாம்.!

இதை தொடர்ந்து 12 வாரங்கள்
கடைப்பிடிப்பதோடு உணவாக
விதையுள்ள
கருப்புத்திராட்சை,
உலர் திராட்சை,
நெல்லிக்காய்,
தேங்காய்,செவ்வாழைப்பழம்,
பேரீச்சம் பழம்,பாதாம் பருப்பு,
கைக்குத்தல் அவல்,கருப்பட்டி,இயற்கை ஊட்டச்சத்து மாவு
போன்றவற்றில் முடிந்ததை
தினமும் ஒரு வேளை உணவாக சமைக்காமல் எடுத்துக்கொள்ள
வேண்டும்.!

கீழாநெல்லிக்கீரை,
வெண்பூசணிக்காய்,
முருங்கைக்கீரை,
கரிசலாங்கண்ணி,
பொன்னாங்கண்ணி
கீரைகளை சமையலில்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.!

தினமும் 10 நிமிடம்  கண்களை சுருக்கி விரித்து சுழற்றி
கண்பயிற்சிகளையும்  செய்து
வந்தால் வேகமாக நிவாரணம்
பெறலாம்.!

ஏற்கனவே மேற்கண்ட காரணங்களுக்காக  அறுவை
சிகிட்சை செய்துள்ளவர்கள்
கண்ணில் மூலிகைச்சாற்றை
விட வேண்டாம்.!
உணவு முறையையும் கண்
பயிற்சியையும்  செய்யலாம்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

  • www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...