I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine

Thursday, 3 January 2019

#இயற்கை_சோப்பு
 #தயாரிக்கும்_முறை

செக்குத்தேங்காய் எண்ணெய்
900 மில்லி (750 கிராம்)
சோற்றுக்கற்றாளை
 ஜெல் 50 கிராம்
சந்தனத்தூள் 50 கிராம்
செம்பருத்திப்பூ 10 எண்ணம்
வேப்பிலை 2 கொத்து
காஸ்டிக் சோடா 150 கிராம்

முதலில் சோற்றுக்கற்றாளை
வேப்பிலை செம்பருத்தி மூன்றையும் சிறிதாக வெட்டி
கொஞ்சம் நீர்விட்டு
அம்மி அல்லது மிக்சியில்
லேசாக அரைத்து பின்  அதில் 450 மில்லி நீர்விட்டு அடுப்பில் லேசாக சூடாக்கி இறக்கி வடிகட்டியச்சாறு 450 மில்லி
எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தச்சாறு நன்றாக ஆறியதும் ஏதேனும் ஒரு வாய் நீண்ட பாத்திரத்தில் ஊற்றி அதில் 150 கிராம் காஸ்டிக் சோடாவைப் போட்டு மெதுவாக கலக்கவும்
இப்படி செய்யும் போது பாத்திரம் சூடாகி லேசாக ஆவியும் ஒரு வாடையும் வரும். (ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த வேலையை செய்ய வேண்டாம்)
தேவையானால் கையுறையும் முகமூடியும் அணிந்து கொள்ளலாம்.

காஸ்டிக் சோடா மூலிகை நீருடன் கலந்து சூடு கொஞ்சம் ஆறியதும் அதோடு 900 மில்லி  தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக 20 முதல் நாப்பது நிமிடங்கள் கலக்கிக்கொண்டே இருந்தால் அனைத்தும் சேர்ந்து தோசை மாவு பதத்தில் வரும் அதில் 50 கிராம் சந்தனத்தூளையும் போட்டு நன்றாக மீண்டும் கலக்கி சோப்பு அச்சி அல்லது சிறிய பேப்பர்  கப்பில் ஊற்றி தனியாக வைத்து விட்டு 15 முதல் 24 மணி நேரம் கழித்துப்பார்த்தால்  நன்றாக இறுகி இருக்கும் பிறகு அதை தட்டியோ அல்லது பேப்பர் கப்பை வெட்டியோ எடுத்துக் கொண்டு மேலும் 15 முதல் 21 நாட்களுக்குப் பிறகு உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம்.! துணி துவைக்கவும் பாத்திரம் தேய்க்கவும் கூட இதையே பயன்படுத்தலாம்.!

15 நாள் வைக்காமல் உடனே உடலில் தேய்த்து குளித்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை,அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.!

இதில் காஸ்டிக் சோடா என்பது ஒரு இரசாயணம் ஆயிற்றே, இதை இயற்கை சோப்பில் பயன்படுத்தலாமா?  என்று சிலர் கேட்கலாம்;

இன்று கடைகளில் கிடைக்கும் 100 % இயற்கை என்று விளம்பரம் செய்யப்படும் அத்தனை சோப்பு சேம்பு  போன்றவற்றிலும் காஸ்டிக் சோடா,சோடியம்,எசன்சியல் ஆயில் போன்ற பல இரசாயணங்கள் 50 % வரை கலந்தே வருகிறது.

ஆனால் நாம் கூறியுள்ள முறையில் மொத்தக்கலவை நீரூம் சேர்ந்து  தோராயமாக 1500 கிராம்.

அதாவது இதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இரசாயணம் கலந்துள்ளது.

நாம் ஏற்கனவே கூறிய 100 % இயற்கை சோப்பை விட இது பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.!

100 % இயற்கை என்ற பெயரில் உலாவும் இயற்கை சோப்பு  தயாரிப்பாளர்கள் இது போல் தங்கள் மூலப்பொருட்களையும் செய்முறையையும் பதிந்தால் மட்டுமே அவர்களின் நம்பகத்தன்மை உலகிற்கு தெரியும்.!

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...