I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை நலம்

Thursday, 10 January 2019

இயற்கை நலம்

#டாக்டர்_கேசவன்
#நாயருக்கு_நன்றி

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

நமது பழைய யோகா மாணவர் ஒருவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல மருத்துவ
பரிசோதனை செய்தபோது …

 'நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடியாது.உங்கள்
நுரையீரலில் இரண்டு பெரிய
காயத்தழும்புகள் உள்ளது' என்று கூறி திரும்ப அனுப்பிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே,சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அனைத்தையும் செய்தபின் அங்குள்ள நுரையீரல் மருத்துவர்

'நீங்கள் மிக ஆபத்தான
கட்டத்தில் உள்ளீர்கள். உடனடியாக அறுவை செய்தே
தீரவேண்டும். நுரையீரல் அடிப்பகுதியில் காற்று அடைத்து கொப்பளம் போல் உள்ளது. இப்படியே விட்டால்
உயிருக்கே ஆபத்து. இதை
சரிசெய்ய மருந்து மாத்திரை
எதுவும் கிடையாது.' என்று;
கூறி உடனே அட்மிட் ஆக
வலியுறுத்தி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன, நமது மாணவர் என்னை  கைப்பேசியில்  தொடர்புகொண்டு  ஆலோசனை கேட்டார்.!

நான் இந்த நுரையீரல் கொப்பள
வியாதியைப்பற்றி இதுவரை
கேள்வியே படாததால் 'நீங்கள்
திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள
நுரையீரல் சிறப்பு மருத்துவரை பாருங்கள்' என்று; கூறி ஆலோசனை கூறினேன்.

இவர் உடனே கிம்ஸ் மருத்துவமனைக்கு போன் செய்து சிறப்பு மருத்துவரை சந்திக்க நேரம் வாங்கி சந்தித்துள்ளார்.

அங்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர். கேசவன் நாயர்
இவரின் பழைய பரிசோதனை முடிவுகளை பார்த்ததோடு
மீண்டும் ஒரு எக்ஸ்ரே எடுத்து வரச்சொல்லி அதையும்
பார்த்துவிட்டு 'அறுவை செய்யும் அளவிற்கு ஒன்றும் ஆபத்து இருப்பதாக தெரியவில்லை. நான் ஒரு சில மாத்திரைகள் தருகிறேன்.பதினைந்து நாள் அதை சாப்பிடுங்கள். தினமும் யோகாவில் உள்ள காற்றை வெளியேற்றும் பயிற்சியையும் செய்யுங்கள். அதோடு ஒரு
ஏர்பில்லோ வாங்கி காலை,
மதியம்,மாலை மூன்று வேளையும் இருபது இருபது முறை வேகமாக ஊதி பயிற்சி செய்யுங்கள். இதில் ஒன்று நுரையீரலில் கொப்பளமாக உள்ள காற்று முழுவதும்
வெளியேறும் அல்லது குறையும்.
அறுவை என்பது இதில் எதுவும் நடக்காவிட்டால் செய்ய வேண்டியது வரலாம்.'
என்று கூறி;அனுப்பிவிட்டார்.

இவரும், பதினைந்துக்கு இருபது நாட்களாக ஒரு வேளை சமைக்காத உணவு,காலை ஒரு மணிநேரம் எளிய யோகாசனம்,
கிரியா,மூச்சிப்பயிற்சி,மூன்று வேளையும் ஏர்பில்லோ ஊதல் என்று தொடர்ந்து விட்டு நேற்று
மீண்டும் கிம்ஸ் மருத்துவமனை சென்று டாக்டர் கேசவன் நாயரை சந்தித்தார் அவர் மீண்டும் எக்ஸ்ரே உள்ளிட்ட
பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, கொப்பளம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இப்பொழுது
தெரியவில்லை.' என்று
கூறியதோடு;

'இனி நீங்கள்
தைரியமாக வெளிநாடு செல்லலாம்.எல்லாம்
யோகா மற்றும் பில்லோ
பயிற்சியின் மகிமை'

என்று கூற,இவர் உடனே, 'உங்களால் தான் சார் அறுவை சிகிட்சையில் இருந்து தப்பியதோடு, வெளிநாடு போகும் வாய்ப்பையும் பெற்றுவிட்டேன். என்று கூறி கண்கலங்க;
'இது எனது வேலையின் ஒரு பகுதிதான். முதலில் உங்கள் யோகா ஆசிரியருக்கு நன்றி கூறுங்கள்' என்று சொல்ல, நமது மாணவர் மருத்துவமனையில் இருந்தே என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசயத்தை கூறி மிகமிக நன்றி
 மாஸ்டர் என்றார்.!

"நான் எனது கடமையை தானே செய்தேன்,பிணியை நீக்கியது
இறையின் செயல்"

என்று கூறி, மகிச்சியோடு 'நலமெல்லாம் பெற்று  வளமுடன் வாழ்க' என்று வாழ்த்தி வைத்தேன்.!

எதற்காக இதை கூறுகிறேன் … என்றால் யோகா,
ஏர்பில்லோ உள்ளிட்ட பயிற்சியில் நுரையீரலில் கொப்பளம் போல புடைத்து நிற்கும் காற்றை
வெளியேற்ற முடியும். என்ற உண்மை நாகர்கோவிலில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவ மனையில் பணிபுரியும் நுரையீரல் மருத்துவருக்கு தெரியாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை,
இருந்தாலும்
நம்பித்தொலைகிறேன்.!
டாக்டர் கேசவன் நாயர் போன்றோரின் சேவையை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்.!

ஏனென்றால் இதுபோன்ற மருத்துவர்களே, இயற்கையோடு இயைந்து, வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டும் அறுவையை
பரிந்துரைக்கும் உண்மையான மருத்துவப்பணியை
செய்கிறார்கள்.!
இதை அனைத்து அலோபதி மருத்துவர்களும் பின்பற்றினால் உண்மையிலேயே எங்கும் ஆரோக்கியம் மிளிரும் செய்வார்களா?

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...