I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை கோட்பாடு

Friday, 2 June 2017

இயற்கை கோட்பாடு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

28.இயற்கை மருத்துவமும்
இரசாயண மருத்துவமும்

"ஒன்றே பூமி
ஒன்றே வானம்
ஒன்றே பிராணன்
ஒன்றே உயிரியக்கம்
ஒன்றே பிணி
ஒன்றே மருந்தும்.! "

இயற்கையில் உள்ள பலவும் ஒன்றிலிருந்து பல்கிப்பெருகி இறுதியில் ஒன்றில் ஒடுங்குவதாகும்.!
இயற்கையின் கீரிடமான மனித படைப்பில் காணப்படும் அத்தனை ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான்.!
அந்த ஒன்று என்னவெனில் அதுதான் பிராண சக்தியின் குறைபாடு.! இந்த குறைபாடை தருவது சக்கையான உணவு, சீரற்ற மனநிலை, மந்தமாக செயல்படும் உடல். இந்த மூன்றையும் தந்தது சமூக சூழலும் தவறான விஞ்ஞான அறிவும்.! உடல் நோய் மட்டுமல்ல சமூக நோய்களான அனைத்திற்கும் மூல காரணம் தவறான வாழ்க்கை முறை மட்டும் தான்.!
இந்த வாழ்க்கை முறை தவறில் இருந்து தோன்றியதுதான் வீபரீத எண்ணங்கள்,தவறான உணவுப் பழக்கம்,தவறான மருத்துவமுறை போன்றவை.! உணவில் இரண்டு வகை உணவுகள் உண்டு ஒன்று செடியிலிருந்து பறித்து அப்படியே சாப்பிடுவது. மற்றொன்று வேகவைத்து,பொறித்து சாப்பிடுவது. செடியிலிருந்து அப்படியே பறித்து சாப்பிடும் காலம் வரை மனிதனுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை. உணவுப்பொருட்கள் கெட்டுப்போவதற்கான வாய்ப்பும் இல்லை. அவித்த,வறுத்த உணவுகளை குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தாவிடில் அவை விசப்பொருளாக மாறிவிடும்.! குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தினாலும்
அதன் சாரம் உடலில் சரியான முறையில் ஜீரணிக்கப்படாவிட்டாலோ அல்லது உடல் இயங்குதிறன் சீராக இல்லாவிட்டாலோ நிச்சயம் ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றும். இதை தான் நோய் என்கிறோம் நோயில் நான்கு விதமான நோய்கள் உள்ளன 1.தீவிர நோய் <காய்ச்சல்,தலைவலி,சளி,உடல்வலி போன்றவை>
2.நாள்ப்பட்ட நோய்
<ஆஸ்துமா, சக்கரை,குடலிறக்கம்,இரத்த அழுத்தம்,ஆண்மைக்குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு,மனநலக் குறைபாடு,கட்டி,கல்,மலச்சிக்கல்,தோல்நோய் போன்றவை>
3.சீரழிக்கும் நோய்கள்
தொழுநோய்,ஏய்ட்ஸ்,புற்றுநோய்,காசநோய்,இதயநோய் திடீர் வைரஸ் நோய் போன்றவை>
4.மரபணு ரீதியிலான நோய்கள் <ஆட்டிசம்,பார்வை இன்மை,உடல் உறுப்பில் ஒன்று இல்லாமலோ மாறியோ பிறப்பது>
இயற்கை மருத்துவ முன்னோடிகளின் கூற்றுபடி பார்த்தோமானால் நோய்களின் பரவலுக்கு  இரண்டே காரணம் மட்டுமே உள்ளது. ஒன்று தவறான உணவு இரண்டு தவறான மருத்துவம்.! தவறான உணவு என்பது அதிகமான அமிலத்தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்வது.!  அதாவது இயற்கை  காய்கறி,கீரை,பழம் போன்றவற்றை அப்படியே  சாப்பிடாமல்  பல் வேறு இரசாயணங்களை கலந்து சாப்பிடுவதாலும் மாமிச உணவு,மாவு உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் நோய்கள் உருவாகும்.!
அடுத்து தவறான வைத்தியம் அதாவது உடலில் தோன்றும் எத்தகைய நோயும் உயிருக்கு தோழனாகும். எந்த நோயும் உருவாக காரணம் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கழிவுகளாகும். அதனால்,அந்த கழிவை நீக்க உண்ணா நோன்பு இருத்தல், பழ உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்,எளிய உடல் பயிற்சிகளை செய்தல்,பிரபஞ்ச ஆற்றல்களை உடலில் சேகரித்தல்  போன்றவற்றை செய்தால் போதும்.! உடல் கழிவுகள் நீங்கிய உடன் நோய் தானாகவே போய்விடும்.!
இதை விடுத்து முதல் இரண்டு நிலை நோயாளிகளுக்கு  வைரஸ் தொற்று,கிருமிகள் பெருகிவிட்டது, வலியை குறைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி உடலில் சேர்ந்துள்ள சிறிதளவு கழிவை நீக்க பெருமளவு இரசாயண மருந்தை  உடலின் உள்ளே மாத்திரையாகவும் மருந்தாகவும்  தொடர்ந்து பலநாட்கள்  கொடுத்து கெடுத்து வருவதால் உயிரின் கவசமாக விளங்கும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் முற்றிலும் செயலிழப்பதாலேயே
மூன்றாம் நிலை நோயான புற்றுநோய்,தொற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் உருவாகிறது.!
அதுபோலவே தாய்,மற்றும் தந்தையின் உயிரணுவில் இருந்த கழிவு மற்றும் இரசாயண மருந்துகளின் தாக்கத்தாலேயே 4 வது நிலையில் உள்ள பிறவி குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கிறார்கள்.!
ஆக, இயற்கை முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி பார்த்தால்  அனைத்து பிணிகளுக்கும் காரணம்  கழிவு உணவும், இரசாயண கழிவு மருத்துவமும் தான்.!
இந்த உண்மையை மறுக்க இதுவரை எந்த இரசாயண மருத்துவர்களுக்கும் துணிவில்லை.!
வைரஸ்,பாக்டீரியா,மைக்ரோஸைமஸ்,பெரியம்மை,தட்டம்மை,சின்னம்மை,டெங்கு,குனியா,காமாளை என்று பல்வேறு பெயர்களை கூறி தடுப்பு மருந்துகள் என்ற பெயரால் பல்வேறு நோய்க் கிருமிகளையும், மிருகங்களின் உடலில் செலுத்திய, கிருமிகளுக்கு எதிராக மிருகங்களின் உடலில் சுரந்த சீரங்களையும் ஆரோக்கியமாக பிறந்த குழந்தைகளுக்கு போடுவதையும் விஞ்ஞான வளர்ச்சி என்று கூறுகிறது.! தந்தையில்லாமல் பலருக்கும்  பிறந்த ஒரு போலி வைத்திய முறை.!   ஆமாம் உண்மையில் அலோபதி என்ற இரசாயண குழந்தைக்கு தந்தை இல்லை.! இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியுள்ள நோய்களுக்கு நமது இரசாயண உணவு முறையும் இந்த இரசாயண வைத்திய முறையும் தான் முக்கியக் காரணம்.!
அலோபதியின் தந்தை என்று அவர்களால் கூறப்படும் ஹிப்போகிரெடஸ்  உண்மையில் கிருமி,பாக்டீரியா பற்றியோ மருந்து மாத்திரைகளைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. அவர் கிரேக்க நாட்டில் ஒரு கோயில் பூசாரியாக இருந்தார். நோயால் தன்னை நாடி வந்த மக்களுக்கு விரதமிருக்கும் வழிமுறைகளையும் ஓய்வெடுக்கும் வழிமுறையையும்  விளக்கிக் கூறுவதே அவரின் பணியாய் இருந்தது.!  < இன்று இயற்கை மருத்துவத்தின் தந்தை என்றும் இவரை கூறுகிறார்கள்> பின்னாளில்  பிரான்ஸில் பிறந்த லூயி பாயிஸ்டர் என்ற ஆய்வக பணியாளரே கிருமிகள் தான் நோய்களை பரப்புகிறது என்ற போலியான கருத்தை முதன்முதலில் உலகில் பரப்பியவர்.!
இது போன்றே போலியோவை ஒழித்தோம்,அம்மையை ஒழித்தோம் என்றெல்லாம் ஆங்கில மருத்துவர்கள் பலரும் கூறுவது மிகப்பெரிய மோசடி உண்மையில் அந்த நோய்களை பரப்பியவர்களே அவர்கள் தான். என்று ; தமிழ் வாணன் அய்யா தனது இயற்கை மருத்துவம் நூலில் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார்.!
உலகில் டெங்கு வைரஸ்,சிக்கன் குனியா வைரஸ், டைபாய்டு வைரஸ், என்று தனித்தனியான வைரஸோ,பாக்டீரியாவோ கிடையவே கிடையாது.அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.! அனைத்து பாக்டீரியாக்களும்,வைரஸ்களும்,மைக்ரோமைஸ்களும் வெவ்வேறு வகையானதாய் இருந்தாலும் அதது ஒரே விதமானவைதான் அவை சென்று சேரும் இடத்தைப் பொறுத்து அதற்கு வேறு பெயர்கள் சூட்டப்படுகிறது.!
உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த,கழிவுகளின் தேக்கமில்லாத உடலில் எந்த வைரஸோ,பாக்டீரியாவோ பெருகவே முடியாது.!
இயற்கை மருத்துவ கொள்கையின் படி
மனித உடலில் பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றுவது அத்தனையும் ஒரே விதமான நோய் தான்.! நான்கு வயதில் சளியாக வந்த நோய்க்கு மருந்து சாப்பிட்டால் பத்துவயதில் காய்ச்சலாக வரும். அதற்கு மருந்து சாப்பிட்டால் 12 வயதில் இழுப்பாக வரும். அதற்கு மருந்து சாப்பிட்டால் 20 வயதில் அதுவே காசநோயாக வர வாய்ப்புண்டு. 40 வயதில் புற்றுநோயும் வரலாம்.! சளி என்பது குறைந்த அளவு கழிவுகளால் செல்  தாக்கப்பட்ட போது வரும்.! புற்று என்பது லட்சக்கணக்கான செல் கழிவுகளால் தாக்கப்படும் போது வரும்.! ஆரம்பத்திலேயே வந்தச் சளியை நான்கு நாள் சீந்தி விட்டிருந்நால் சரியாய் போயிருக்கும்.! அதை விடுத்து உலகில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்துகளை போட்டு கழிவை உள்ளேயே பூட்டி வைத்ததால் அவை இன்று உடலில் உள்ள அத்தனை செல்லையும் எரிக்க ஆரம்பித்து விட்டன.!
இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம் அப்ப எந்த நோய்க்கும் எந்த மருந்தையும் எடுக்கக் கூடாதா? என்று தோன்றலாம் மருந்தில் இரண்டுவகை உண்டு இரசாயணத்தால் தயாரிக்கப்பட்டு செல்களுக்கு மயக்கத்தை தந்து உள்ளேயே தங்கும் இரசாயண மருந்து ஒன்று. உடலை சுத்திகரித்து கழிவை நீக்கி பிராண சக்தியை அதிகப்படுத்தும் மூலிகை மருந்து இன்னொன்று.!
மூலிகை மருந்தை குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.!
மற்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.! இன்று மூலிகை மருந்து என்று கூறப்படும் பிரபல பிராண்டுகளிலும் இரசாயணம் இருக்கிறது.! பக்கவிளைவுகள் கிடையாது என்னும் ஹோமியோ மருந்திலும் இரசாயணம் உள்ளது.!
ஆகையால் அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது.!
ஆனால், இயற்கை சூழல்,உண்ணாநோன்பு, உடற்பயிற்சி ,பழவுணவுகளை உண்பது,எளிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளல் போன்றவற்றை யாரும் எளிதாக கடைப்பிடிக்கலாம்.! இயற்கை முறையில் உள்ள ஒரே பின்னடைவு என்னவெனில் நோய் நீக்க அது எடுத்துக் கொள்ளும் காலம் சற்று அதிகமாகலாம்.என்பதுதான்.!
அத்தனைக் காலம் பொறுமையை கடைப்பிடித்தால் நோயை வந்த வழியே முழுதாக ஓட்டி விடலாம்.!
1.விரதம் இருப்பது 2.எளிய உடற்பயிற்சிகளை செய்தல்
3.கழிவுநீங்க உதவுதல் 4.இயற்கையோடு இயைந்திருத்தல் 5.சூரியன்,காற்று,மண்,நீர்,ஆகாய ஆற்றல்களை முறையாக பயன்படுத்தல்
6. அமைதியான மனநிலையில் தேவையான அளவு ஓய்வெடுத்தல்
7.பசித்தால் மட்டுமே உண்ணுதல்
இவற்றை முறையாக கடைப்பிடித்தால் இயற்கையில் உடலை எத்தகைய ஆரோக்கிய குறைபாடிலிருந்தும் மீட்டுவிடலாம்.!
செய்வோமா சகோதரர்களே?

--ஏகப்பிரியன் DYT

தொடரும் …

🍁 *100% இயற்கை மூலிகை
*தயாரிப்புகளுக்கு*

AUM HERBALS
Mobile & Whatsapp
9629368389

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...