*வெட்டுப்பட்ட காயத்திற்கு*
உண்ணிச்செடி - காய் பச்சையாகவும் பழம் கறுப்பாகவும் நல்ல மிளகை விட சிறியதான வடிவில் இருக்கும். இதில் பல வண்ணத்தில் சின்னச் சின்னப்பூக்கள் கொத்தாய் வளரும்.!
இந்தச் செடியின் இலையை கையளவு பறித்து இரு குறுமிளகளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து வெட்டுப்பட்ட காய
த்தில் உள்ள இரத்தத்தை துடைத்துவிட்டு அதில் இந்தக்கலவையை பூசி ஒரு கட்டு கட்டிவிட்டால் விரைவில் காயம் ஆறிவிடும்.! அதுவரை காயத்தில் நீர் படக்கூடாது.!
கீழே விழுந்து கைகால்கள் ஊராய்ந்து காயம் ஏற்பட்டால் உடனே சிறுநீரை பிடித்து காயத்தை கழுவிவிட்டால் புண் விரைவில் ஆறிவிடும்.!
<உடனடி காயத்திற்கு இது மருந்தாகும். நாள்ப்பட்ட புண்ணிற்கு சரியாகாது.!>
யோகாசனம்,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் போது உடலில் எங்காவது சுளுக்கு,பிடிப்பு போன்றவை தோன்றினால் சிறிய துண்டு சுக்கை எடுத்து பசும்பாலில் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு அரைமணி நேரம் அசையாது படுத்திருந்தால் சுளுக்கு போய்விடும்.!
உடலில் அடி இடிப்பட்டு உடலில் உள் காயம் ஏற்பட்டாலோ அல்லது இரத்தக் கட்டு இருந்தாலோ மூன்று கையளவு சிறுநீர் அல்லது கோநீரை குடித்தால் உடனே
இரத்தக்கட்டு மாறிவிடும்.!
உணவு குற்றத்தாலோ அல்லது பூச்சிக்கடியாலோ உடலில் அலர்ஜியாகி சிறு தடிப்புகள் ஏற்பட்டால் சிறிது எச்சியை தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக இரண்டு மூன்றுமுறை தேய்த்து வந்தால் சரியாகிவிடும்.!
*AUM HERBALS*
Mobile & Whats App
9629368389
http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in
No comments:
Post a Comment