*உயிர் மீட்கும் மருத்துவம்*
34.நிலைக்குமா நிலையாமைகள்?
" குழந்தையாம் பருவம் கடந்து
மழலையாம் பருவம் பெற்றோம்.!
மழலையாம் பருவம் கடந்து
வாலிபமாம் பருவம் பெற்றோம்.!
வாலிபமாம் பருவம் கடந்து
இளமையாம் பருவம் பெற்றோம்.!
இளமையாம் பருவம் கடந்து
முதுமையாய் முற்றுபெறுவோம்.!
வாழ்வென தோன்றும் பாதை …
மரணத்தில் முடியும் கீதை.!
சாதியின் சடங்கு
மாயை …
மதத்தின் விலங்கு மாயை …
அன்னையின் அன்பு மாயை …
அறிந்த நல்கல்வி மாயை …
காதலின் இன்பம் மாயை …
பதவியின் சுகமும் மாயை …
பண்ணிய தியாகம் மாயை …
தேடிய செல்வம் மாயை …
வாடிய நொடியும் மாயை …
பாடிய கடவுளும் மாயை …!
இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் போவது மாயை.!
ஆயின்,
இருக்கின்ற பூமி தன்னை நலமாக வாழச்செய்து செய்து
இயற்கையை காத்தல்
இன்பம்.!
இளையோருக்கு அளித்தல் இன்பம்.!
அதுவே நிரந்தரம்
உயிர் வாழும் வரம்தரும்.!
மரமில்லா பூமித்துண்டு
- மரணத்தின் இறுதிச்சங்கு.!
தூய நீரில்லா பூலோகம் -
பகை கொண்ட எமலோகம்.!
காற்றை விசமாக்கும்
விஞ்ஞான வளர்ச்சி
- உலகை அழிக்கும்
பலமான முயற்சி.!
அமுதூறும் விளைநிலத்தில் அமிலம் எடுக்கும் திட்டம்
-தாயை விற்று பாலை வாங்குவதைப் போன்ற மட்டம்.!
சுயநல கத்திக்கொண்டு … இயற்கையை
வெட்டிக்கொன்று …
மாயையில் மயங்கித்
திரியும் மானிடா,
திடங்கொள்ளு.!
தீமையை விட்டுத்தள்ளு …!
இருக்கின்ற பூமிதன்னை இதமாக வாழச்செய்து … இயற்கையை
காத்தல்
செய்வோம் …!
இளையோருக்கு ஈந்து செல்வோம்.!
அதுவே நிரந்தரம் …
உயிர் வாழ்வு நிலைபெறும்.!
-ஏகப்பிரியன் DYT
எதைப்பற்றியோ எழுத முனைந்தேன். ஆனால்,அதில் தற்கால அரசியல் வியாதிகளின் பிண அரசியல் நாற்றம் வயிற்றைப் புரட்டியதால் இந்த அளவில் இதை முடித்துக் கொண்டேன்.!
நலம் பெருகட்டும் …
தொடரும் …
100%🌿 இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & whatsapp
9629368389
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
Youtube - amyogatrust
yoga for all
No comments:
Post a Comment