குழந்தைகளுக்கான சளி மருந்து
சுக்கு
மிளகு
திப்பிலி
ஓமம்
கிராம்பு
பொரித்த வெங்காரம்
சாதிலிங்கம்(சுத்தி செய்தது)
மேற்கண்ட சரக்குகள் வகைக்கு அரைப்பலம்
இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழம் சாறு விட்டு நன்றாக அரைத்து பாசிப் பயிறு முதல் மிளகு அளவு உருட்டி நிழலில் உலர்த்தி குளிகைகள் ஆக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், சுரம், வாந்தி, அஜீரணம், அஜீரண பேதி, முதலிய வியாதிகளுக்கு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்
பிறந்த குழந்தை 15 நாட்களிலிருந்து இந்த மருந்தை உபயோகப்படுத்தலாம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறேன், அனுபவத்தில் இது நல்ல பலனை தருகிறது.
No comments:
Post a Comment