I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine

Thursday, 4 October 2018

*இரத்த விருத்தி ஆண்மை அதிகரிக்க*

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தையும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
சிறிது குங்குமப்பூ
செய்முறை: ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்

 இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் ஒரு அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

  இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள்.

இது போன்றே அத்திப்பழ தேனூறலும் செய்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் – அரைக்கிலோ
சுத்தமான தேன் – அரைக்கிலோ
சிறிதுகுங்குமப்பூ பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும்.

 அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.

 அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

  அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்.

இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிப்பு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்.
(இரண்டும் முடியாது என்பவர்கள் ஏதேனும் ஒரு கலவையை மட்டுமே உண்டும் பயனடையலாம்)

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.!

-இணையப்பகிர்வு
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...