I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தற்காப்பு இரகசியங்கள்

Thursday, 12 October 2017

தற்காப்பு இரகசியங்கள்

உயிர் மீட்கும் மருத்துவம்

22 A. தற்காப்பு கலையும்
ஆரோக்கிய வாழ்வும்

" அழகின் அடிப்படை
உயற்வின் ஊற்று
வாழ்வின் வசந்தம்
ஒழுக்கத்தின் ஓசை
அறிவாளிகளின் முதல் தேடல்
முட்டாள்களின் இறுதி புகலிடம் -
கலை மனிதனின் மேன்மை.! "

உலகில் மிகப்பழமையான கலைகள் மூன்று.

1.மல்யுத்தம்
2.யோகா
3.பரதநாட்டியம்

இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் இந்த மூன்று கலைகளுமே நமது நாட்டின்
சொத்து.! இதன் பிறகு உலகில் தோன்றிய பலநூறு  கலைகளுக்கும் இந்த மூன்று கலைகளுமே சாரம்.!
மனிதன் தனது அறிவின் மூலமும் உழைப்பின் மூலமும் ஒரு விசயத்தை ஒழுங்கு படுத்தும்போது
அது கலையாகப்பிறக்கிறது.!
கலையே மனிதன்  மகிழ்வாக வாழவும், மகானாக மலரவும்
வழிகாட்டுகிறது.!
தற்காப்புக்கலை என்பது மனிதன் தனது உடலையும் பொருளையும்
தன்மானத்தையும் காத்துக்கொள்ள
உருவாக்கப்பட்ட ஒரு அரியக்கவசம்.!
யோகம்,நடனம், இசை போன்றவற்றில் உள்ள அனைத்து நுட்பங்களும் கச்சிதமாக ஏற்கனவே வடிவமைக் கப்பட்டுள்ளதால்
அவற்றை பயில்கின்றவர்களுக்கு
எத்தகைய ஆபத்தும் இல்லை என்பதோடு நொடியில் முடிவெடுத்து
செயல்பட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு கிடையாது.!
ஆனால், தற்காப்புக்கலையை பொறுத்தவரை வடிவமைக்கப்பட்ட நுட்பங்களை மட்டுமே சார்ந்திருந்தால் வெற்றிபெற முடியாது.
நொடியில் முடிவெடுக்கும் திறனும்
ஆபத்தில் சிதறாத மனநிலையும்
தற்காப்பு கலை பயில்பவர்களுக்கு
மிக முக்கியத்தேவை.!
இந்த ஒரு காரணத்தாலேயே
மற்ற எல்லா கலைகளை விடவும்
தற்காப்புக்கலை உடல்,மன ஆற்றலை அதிகப்படுத்துவதில் முதன்மையாய் விளங்குகிறது.!
சரியாகத்தான் கூறுகிறேன். யோகத்தின் நிறைவுப்பகுதியில் பிரபஞ்ச ஆற்றல் முழுவதையும்
தனதாக்கிக் கொள்ளும் உடல்,மன,ஆன்மா இணைப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஆபத்து நிறைந்த ஒரு பயிற்சி முறை. இந்த நிலையில் பலருக்கும் மூளை குழம்பிப்போக வாய்ப்புள்ளது.என்பதால் இந்த நுட்பங்களை பல குருமார்கள், யாருக்கும் கற்பிப்பதில்லை. ஆனால்,தற்காப்பில் அப்படி இல்லாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் சரியான காலத்தில் 
அனைத்து நுட்பங்களுமே எல்லோருக்கும் கற்பிக்கப்படுகிறது.!
அதையும் தாண்டி பாய்வது
அவரவர் தனித்திறனைப் பொறுத்தது.!

யோகாவில் உள்ள பலநுட்பங்கள் மல்யுத்தம் போன்ற பழைய தற்காப்புக்கலை முதல் கராமர போன்ற புதிய தற்காப்பு முறையிலும் நிறைந்துள்ளது. அவை மனம் குவித்தல்,பிராண சக்தியை அதிகரித்தல்,கழிவு நீக்கம் போன்ற பல தலைப்புகளில் பாடமாக உள்ளது.!
உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பூட்டிய அறைகளில் பல இயந்திரங்களுக்கு மத்தியில் செய்யப்படும் உடற்பயிற்சிகளை விட  திறந்த வெளியில்  பயிலப்படும் தற்காப்புக்கலை பத்து மடங்கு அதிக ஆரோக்கியத்தை வழங்கும். அனைத்து தற்காப்பு கலை பயிலகங்களிலும் உடல் தகுதிக்காக எளிய விளையாட்டு உடற்பயிற்சிகளும் கற்பிக்கப்படுகிறது.!
வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் தினமும்  இரண்டு மணி நேரம் மல்யுத்தம்,வர்மக்கலை,களரி,குத்துவரிசை,சிலம்பம்,ஜூடோ,குத்துச்சண்டை,கராத்தே,டேகுவண்டோ,குங்ஃபூ,தாய்ஃஷி,கராமர  போன்ற தற்காப்புக்கலைகளில் ஏதேனும் ஒன்றை பயின்று வந்தால் உடல் திறன் அதிகரிப்பதுடன் கவனக்குவிப்புத்திறன்,நோயெதிர்ப்பு ஆற்றல், உள்ளுறுப்புகளின் பலம், இரத்தசுத்தி போன்றவையும் ஏற்படுவதோடு புகைப்பிடித்தல், தாழ்வு மனப்பான்மை,மனஅழுத்தம்,மதுகுடித்தல்,தவறான சேர்க்கை, உடல் பருமன்,உடல் பலவீனம்,தற்கொலை சிந்தனை போன்ற பல உடல், மன சீர்கேடுகள் குணமாகும்.!

கராத்தே,குங்ஃபூ,குத்துச்சண்டை போன்ற கலைகளில் உள்ள சிறிய பின்னடைவு என்னவென்றால் இவற்றை ஒரு 35,40 வயதிற்கு மேல் புதிதாக கற்றுக்கொள்வதற்கான உடல் தகுதி பலருக்கும் இருப்பதில்லை.
அதுபோலவே வெறுமனே காற்றில் வேகமாக குத்துதல்,உதைத்தல் போன்ற  நுட்பங்களை இந்த தற்காப்பு பயிற்சியில்  மிக அதிகமாக செய்யப்படுவதால் உடல் இணைப்பு பகுதிகளில் சிலருக்கு வலி ஏற்படும்.! தற்காப்புக்கலைகளில் உள்ளதைப்போன்ற கைகால்களை நீட்டல்,குதித்தல்,சுழலுதல் போன்ற பல நுட்பங்கள் நடனக்கலையிலும் உள்ளது. ஆயினும் நடனம் கற்பதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.! தாய்ச்சி தற்காப்புக்கலையில் வேகமாக குத்துதல்,வேகமாகஉதைத்தல்,வேகமாக சுழலுதல் போன்றவை இல்லாததால் இது உடலுக்கு உறுத்தலை வழங்காமல்
சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாய் இருக்கிறது. நமது மல்யுத்தம்,வர்மம்,களரி,சிலம்பம்,குத்துவரிசை போன்ற தற்காப்புக்கலைகள் உடலை அதன் போக்கிலேயே விட்டு புவியீர்ப்பு விசையின் இயக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு
உடல்,மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆபத்தான நேரத்தில் எளிதாக தற்காத்துக்கொள்ளவும் பேருதவி புரிகிறது.!
நான் எனது பதினைந்தாவது வயதில் நாகர்கோவில் மின்னல் திரவியம் ஆசானின் சீடர் பறக்கன்கால், வேல் முருகன் அண்ணனிடம் கொஞ்சம் நாட்கள் சிலம்பம் கற்றுக்கொண்டேன். நான் கற்ற பல நுட்பங்களை மாட்டுக்காரவேலன்,தாய் சொல்லை தட்டாதே போன்ற சில எம்ஜிஆர் படங்களில் கண்டு மிகவும் மகிழ்ந்துள்ளேன்.! ஆனாலும் என்னால் தொடர்ந்து சிலம்ப வகுப்பிற்கு செல்ல முடியவில்லை. ஏனெனில்,இன்றுபோல்  கலையை மட்டுமே கற்றுக்கொடுக்கின்ற ஆசான்கள் அன்று இல்லை. பல்வேறு பணிகளுக்கு இடையில்
தான் வேல்முருகன் அண்ணன்,நான் உள்ளிட்ட  ஒரு சிலருக்கு பயிற்சி கொடுத்துவந்தார். பிறகு மாணவர்கள் வரத்து குறைந்ததால் அவர் வகுப்பெடுப்பதை விட்டுவிட்டார்.! அதன் பிறகு கோட்டாரில்  பழனிமுருகன் மாஸ்டரிடம்  ஆலன் திலக் சிட்டோரியோ கராத்தே வகுப்பில் சேர்ந்து சென்சாய் சசிதரன் மாஸ்டரிடம் பிளாக்பெல்ட்  வரை பெற்றேன்.! யோகாவின் மூலம் எனது பல பிணிகள் குணமாகி இருந்தாலும்.மனித உடல் மற்றும் மனதின் ஆற்றலை நான் நேரடியாக தரிசித்தது கராத்தே வகுப்பில் தான். நான் கலந்துகொண்ட முதல் கராத்தே போட்டியில் எனது எடைப்பிரிவில் <குமித்தே> எனது சீனியர் தெங்கம்புதூர் கண்ணனை தோற்கடித்து இரண்டாம் இடம் பிடித்தேன். அதன் பிறகு திருச்சூர்,சென்னை,பெங்களூர் போன்ற  பல மாநிலங்களில்  நடந்த அகில இந்திய அளவிலான தற்காப்புக்கலை போட்டிகளிலும் கலந்துகொண்டு  டேகுவாண்டோ,குங்ஃபூ போன்ற பல தற்காப்புக்கலை மாணவர்களுடனும் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளேன்.!
எனக்கு 23 வயதில் வந்த நுரையீரல் அடைப்பு  நோயை விரட்டுவதற்கு யோகாவைப் போலவே தற்காப்புக்கலை பயிற்சியும் மிகமிக உதவிகரமாய் இருந்தது. நுரையீரல் அடைப்பு இருந்த போது முதலில் பயிற்சி  செய்யும் போது களைப்பு,தூக்க உணர்வு,இழுப்பு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இரண்டு மூன்று மாத  பயிற்சிக்கு பின் அவை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதை நினைத்தால் இன்றும் கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது.!
அது போலவே நான் கற்ற தற்காப்புப்பயிற்சியால்  பல முறை எனக்கு வந்த ஆபத்துகளில் இருந்து எளிதாக தப்பியுள்ளேன்.!
சில பலவீனர்களையும் குழந்தைகளையும் ஆபத்திலிருந்து  காப்பாற்றியும் இருக்கிறேன்.!
மது,புகை,தீய எண்ணங்கள் போன்ற கெட்டப்பழக்கங்கள் என்னை இன்றும் தீண்டாமல் இருப்பதற்கு நான் கற்ற தற்காப்புப் பயிற்சிகளும் மிக முக்கியக்காரணம்.! எனது திருமணத்திற்கு பின்  பணி நிமித்தமாக சென்னை வந்து விட்டதால் பல கலைகளையும்  பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.!
ஆனாலும், தற்காப்புக்கலை தந்த அடிப்படை
ஆரோக்கியமும் பாதுகாப்பும் என் உயிரோடு கலந்து இன்றும் உறவாடி வருகிறது.! இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் மகன் இஜாஸ் +2 முடித்தவுடன் அவனிடம் " மேற்கொண்டு என்ன படிக்கப் போற? " அப்டின்னு கேட்டேன்; அவன் குங்ஃபூ படிச்சி பெரிய மாஸ்டர் ஆகப்போறேன்னு சொன்னான்.! பாருடா?
இதுதான்,விட்டகுற தொட்டக்குறனு சொல்றது போல.! நான் விட்ட இடத்திலிருந்து நீ தொடங்கி நடப்பதை விட ஒரு பத்தடி முன்னாடிப்போக முயற்சி பண்ணு அப்படின்னு சொல்லி இயற்கை மருத்துவக்கல்லூரில அவனை சேர்த்துவிட்டேன்.! அங்க படிச்சிகிட்டே ஓய்வு நாளில் திட்டுவிளை ஷேக் மாஸ்டரிடம் ஊசூ [குங்ஃபூ] வகுப்பிற்கும் போய் வருகிறான்.!
ஆண் பிள்ளைகளைப்போலவே இன்றைக்கு பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. வருடக் கணக்கில் பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு கூட ஒரிரு நாளில் ஒரு சில முக்கிய தற்காப்பு, ஆரோக்கிய இரகசியங்களை  கற்பித்தால் கூட வாழ்வு நலமாக அமையும்.! இந்த நோக்கத்தோடு எனது கொடைகால இயற்கை வாழ்வியல் வகுப்பில் வர்மக்கலை,சிலம்பம்,கராத்தே,குங்ஃபூ போன்ற கலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 முக்கிய தற்காப்பு யுக்திகளை பயிற்றுவிப்பதாய் ஒரு விளம்பரம் செய்தேன். கற்க வந்தது இரண்டு பேர்.அதில் ஒருவர் "ஆயிரம் ரூபாய் கட்டணம்  என்பது அதிகம் "என்றுகூறி ஓடிவிட்டார். இன்னொருவர் பணத்தைக் கட்டிவிட்டு அடி  தாங்க முடியாமல் அடுத்த நாள்முதல் வரவேயில்லை.அதன் பிறகு குமரியை சேர்ந்த ஒரு பேட் மிண்டன் வீராங்கனைக்கு ஒரு மாதம் தற்காப்புக்கலை பயிற்சியளித்தேன்.
மிக எளிதாக இருப்பதாக கூறி இப்பொழுதும் பயிற்சிகளை நினைவில் வைத்துள்ளார்.!
நமது ஆதி மருத்துவ முறையில் இந்த  தற்காப்பு நுட்பங்களையும் சேர்க்க வேண்டும்.!
முடிந்தவர்கள் ஏதேனும் ஒரு  தற்காப்பும்  பயின்று, ஆரோக்கியமும் தற்சார்பும்  மிக்கவர்களாய் வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …

ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...